Untitled Document
May 2, 2024 [GMT]
லிங்கா படம் ரூ. 158 கோடி வரை வசூல் செய்திருக்கிறது: - கே.எஸ். ரவிக்குமார்
[Saturday 2016-01-09 16:00]

லிங்கா படம் வெளியாகி எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தது என்று நாம் அனைவரும் அறிவோம். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், படம் படுதோல்வி என்று சிலர் கூறிவருகின்றனர்.அண்மையில் இதுகுறித்து கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், லிங்கா படம் ரூ. 158 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.


10 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே!
[Saturday 2016-01-09 16:00]

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இந்த ஆண்டு இவர் நடிப்பில் பிக்கு, தமாஷா, மாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்கள் வெளியாகின. இதில் பிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தமாஷா சராசரி படமாக இருந்தது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் மாஜிராவ் மஸ்தானி வசூல் மழை பொழிகிறது. இந்த ஆண்டு வெளியான 3 படங்களில் இரண்டு நன்றாக ஓடியதால் தீபிகா படுகோனேயின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இவரை தேடிவரும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


நலிந்த கலைஞர்களுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் மூலம் உதவி செய்யப்படும்: - கோவை சரளா
[Saturday 2016-01-09 16:00]

தென் இந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள்


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப் படமான
[Saturday 2016-01-09 16:00]

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப் படமான


முன்னணி நடிகர்களின் சம்பளம் குறித்து உதயநிதி அதிரடி கருத்து!
[Saturday 2016-01-09 09:00]

பொங்கல் தினத்தை முன்னிட்டு உதயநிதி நடிப்பில் கெத்து படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்த ப்ரோமோஷன் வேலைகளில் இவர் பிஸியாகவுள்ளார்.இந்நிலையில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளிக்கையில்


பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் டாப்ஸி!
[Saturday 2016-01-09 08:00]

ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா-2 ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் அடுத்து பாலிவுட்டில் Shoojit Sircar இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகின்றது.


தெறி பட இசையினை வெறித்தனமாக உருவாக்கும் ஜி.வி.பிரகாஷ்!
[Saturday 2016-01-09 08:00]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம்


ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள நடிகர் கமல்!
[Saturday 2016-01-09 08:00]

தமிழ் சினிமாவில் நிறைய புது விஷயங்களை ஆராய்ந்து அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் Harvard Business School and Harvard Kennedy School என்ற இடத்தில் நடக்க இருக்கும் India Conference 2016 என்ற மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அந்த மாநாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு India in Transition - Opportunities and Challenges. உலகநாயகனுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் மட்டுமில்லாது, அந்த பெரிய மாநாட்டில் தென்னிந்திய சினிமாவில் பங்குபெறும் முதல் நடிகரும் இவரே ஆவார்.


பாலிவுட் படத்தில் நடிக்க தயாராகும் விக்ரம்!
[Saturday 2016-01-09 08:00]

விக்ரம் நடிப்பில் கடைசியாக வந்த 10 எண்றதுக்குள்ள பெரும் தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இவர் ஆனந்த் ஷங்கர், திரு இயக்கத்தில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் அடுத்து பாலிவுட் இயக்குனர் ஓம் ராவுத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.இப்படம் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு என கூறப்படுகின்றது. ரூ 100 கோடிகளுக்கு மேல் இப்படத்தின் பட்ஜெட் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


நடிகைகளின் நடிப்பை மட்டும் ரசிகர்கள் பார்க்க வேண்டும்! - பார்வதி
[Saturday 2016-01-09 08:00]

பெங்களூர் நாட்கள்


அமலாபால் நடிக்கும் அம்மா கணக்கு! - தனுஷ் தயாரிப்பாளர்
[Friday 2016-01-08 19:00]

தனுஷ் நடித்த படங்கள் சரியாக வசூலிக்கவில்லை எனினும் அவர் தயாரித்த காக்கா முட்டை, நானும் ரவுடிதான் போன்றவை நல்ல லாபம் சம்பாதித்தன. அதனால் தயாரிப்பை புது வருடத்திலும் தொடர்கிறார். அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலாபால், ரேவதி, சமுத்திரகனி நடிக்கும், அம்மா கணக்கு என்ற படத்தை நேற்று தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தொடங்கியது. இதில் தனுஷ் தயாரிப்பாளர் மட்டுமே. அஸ்வினி ஐயர் இந்திப்பட இயக்குனர் நிதேஷ் திவாரியின் மனைவி. இந்தியில் அஸ்வினி இயக்கிய 'நில் பட்டே சன்னாட்டா' படத்தின் தமிழ் ரீமேக் அம்மா கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


ஏமி ஜாக்சனின் விசா காலத்தை நீட்டிக்காததால் தாமதமானது தெறி!
[Friday 2016-01-08 07:00]

தெறி படத்தின் பாடல் காட்சி ஒன்று ஏமி ஜாக்சனின் விசா காரணமாக இன்னும் படமாக்கப்படாமல் உள்ளது. சென்ற வாரத்தில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த ஏமி ஜாக்சன், விசா காலத்தை நீட்டிக்காததால் அப்படியே மீண்டும் லண்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது விசாவை புதுப்பித்துக் கொண்ட பிறகே சென்னைக்கு வர முடியும் என்பதால், குறிப்பிட்ட பாடல் காட்சி இன்னும் எடுக்கப்படாமலே உள்ளதாக தெறி படக்குழு தெரிவித்துள்ளது. தெறியில் விஜய்யுடன் சமந்தா, ஏமி ஜாக்சன் இருவரும் நடித்து வருகிறார்கள்.


[Thursday 2016-01-07 23:00]

இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து


சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்! - ஸ்ரீகாந்த்
[Thursday 2016-01-07 21:00]

ரோஜாக்கூட்டம், பூ, பார்த்திபன் கனவு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருடைய நடிப்பில் விரைவில் சவுக்கார்பேட்டை, நம்பியார் ஆகிய படங்கள் வரவிருக்கின்றது.இந்நிலையில் நம் சினி உலகம் நேயர்களுக்காக ஸ்ரீகாந்த் பேட்டி கொடுக்கையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டைக்குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இவர் கூறுகையில்


பொலிஸாரிடம் சான்றிதழ் கேட்ட சூப்பர் ஸ்டார்!
[Thursday 2016-01-07 19:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதை தொடர்ந்து 2.O படத்திற்காக பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளார்.எப்போதும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது தன் மீது குற்ற வழக்குகள் இல்லை என போலிஸாரிடம் சான்றிதழ் வழங்கிய பின் தான் வெளிநாடு செல்ல அனுமதிப்பார்கள்.அந்த வகையில் 2.O படக்குழுவினர்கள் அனைவரும் இதற்காக போலிஸாரிடம் சூப்பர் ஸ்டார் உட்பட குற்ற வழக்கு இல்லை என்று சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளனர்.


மலேசியாவில் பெரிய தொகைக்கு விற்பனையான கபாலி, தெறி படங்களின் உரிமம்!
[Thursday 2016-01-07 18:00]

ரஜினி நடிப்பில் உருவாகி வரும்


பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் பீப்பிள் சாய்ஸ் விருது!
[Thursday 2016-01-07 14:00]

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். சுமார் 45 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவின் புகழ்மிக்க பீப்பிள் சாய்ஸ் விருதையும் கைப்பற்றியுள்ளார். எம்மா ராபர்ட்ஸ், ஜேமி லீ கர்ட்ஸ், லீ மிச்செல், மார்சியா கே ஹார்டன் போன்ற முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்குத்தள்ளி சிறந்த நடிகைக்கான பீப்பிள் சாய்ஸ் விருதுக்கு அவர் தேர்வு பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.


விக்ரம் உருவாக்கத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் மழை வெள்ள ஒற்றுமை பாடல்!
[Thursday 2016-01-07 07:00]

சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது.


பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு S3 ல் இணையும் சூர்யா-ஹரி கூட்டணி!
[Thursday 2016-01-07 07:00]

சூர்யா-ஹரி கூட்டணியில் தொடர் பாகமாக சிங்கம்-3 படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கின்றது. இப்படத்திற்கு S3 என்று தலைப்பு வைத்துள்ளனர்.மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு வெளிவந்தது. இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.ஹரி-ஹாரிஸ் ஜெயராஜ் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்பு நாளை விசாகப்பட்டிணத்தில் நாளை தொடங்கும் என கூறப்படுகின்றது.


பீப் பாடல் பிரச்சனை: - மனுவை வாபஸ் பெற்ற சிம்பு!
[Thursday 2016-01-07 07:00]

பீப் பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை வாபஸ் பெற்றார் சிம்பு. பெண்களை அவதூறு செய்யும் வகையில் பீப் பாடல் இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின்பேரில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி: - அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்த ஆர்யா!
[Wednesday 2016-01-06 22:00]

மலையாளத்தில் வெற்றி கண்ட பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கின் (பெங்களூர் நாட்கள் ) பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.இதில் படத்தில் நடித்த ஆர்யா, ராணா, சிம்ஹா, ஸ்ரீ திவ்யா மற்றும் பார்வதி மேனன் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் படத்தை பற்றி பல விஷயங்கள் பேசிய போது ஒரு பத்திரிகையாளர் ராணாவிடம் த்ரிஷா உறவு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினர்.இதற்கு இந்தப்படத்தில் சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி ஆகிய மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கேளுங்கள் என்று சொன்ன ராணா அதோடு நில்லாமல், த்ரிஷா பற்றி ஆர்யாவிடம் கேளுங்கள் என்று ஆர்யாவை மாட்டிவிட்டார்.உடனே ஆர்யாவின் பக்கம் பத்திரிகையாளர் பார்வை போக, த்ரிஷா எனக்குத் தங்கச்சி மாதிரி ராணாவுக்கு என்ன மாதிரி என்று ராணாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.


ரசிகரின் கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் சொன்ன ஜெயம் ரவி!
[Wednesday 2016-01-06 22:00]

ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என கடந்த வருடத்தில் 3 ஹிட் படங்களை கொடுத்தவர் ஜெயம் ரவி. இவரின் திரைப்பயணத்தில் பேராண்மை தவிர்க்க முடியாத படம்.இந்நிலையில் இன்று டுவிட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அதில் ரசிகர் ஒருவர்


பெண்களைப் பற்றி உயர்வாக சொல்லும் காதல் பாடல் ஒன்றை வெளியிடும் அனிருத்!
[Wednesday 2016-01-06 22:00]

சிம்புவின் ஆபாச பாடலுக்கு இசை அமைத்ததாக எழுந்த புகார் காரணமாக இசை அமைப்பாளர் அனிருத் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார். சிம்பு பாடல் காரணமாக அனிருத்துக்கும் பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதற்கு பரிகாரம் தேடும் வகையில் பெண்களைப் பற்றி உயர்வாக சொல்லும் காதல் பாடல் ஒன்றை அனிருத் வெளியிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் என் நண்பர்களும் ரசிகர்களும் காதலர் தினத்தில் என்னிடம் இருந்து அருமையான பாடல் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இந்த பாடல் பரிகாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா நடித்த தனி ஒருவன், மாயா படங்கள்!
[Wednesday 2016-01-06 21:00]

தென்னிந்தியா சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. கடந்த வருடம் இவர் நடித்த நானும் ரவுடி தான், மாயா, தனி ஒருவன் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.இந்நிலையில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கவுள்ளது. இதில் கிருமி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கின்றது, ஆரஞ்சுமிட்டாய், பிசாசு ஆகிய படங்கள் பங்கேற்கின்றது.இது மட்டுமின்றி நயன்தாரா நடித்த தனி ஒருவன், மாயா ஆகிய படங்கள் கலந்துக்கொள்ளவிருக்கின்றது.


இன்று 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்!
[Wednesday 2016-01-06 12:00]

இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள். இதனையொட்டி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ரஹ்மானும் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2016 முழுக்க சென்னையில்தான் இருப்பேன். இந்த வருஷம் கௌதம் மேனன் படமும், சூர்யா படமும் ரெடி. ஷங்கரின்


சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் பெண்ணாக அவதாரம் எடுக்கும் மதுமிதா!
[Wednesday 2016-01-06 08:00]

"புத்தன் இயேசு காந்தி" திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் செயற்பாட்டாளர் கேரக்டரில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக மதுமிதா, புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடித்து வருகிறார். இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.


சுறுசுறுப்புடன் பணியாற்றுவதற்கும்,ஞாபக ஆற்றலோடு இடைவிடாமல் பேசுவதற்கும் யோகாவே காரணம்: சிவக்குமார்
[Wednesday 2016-01-06 08:00]

சிவக்குமார் கம்பராமாயணத்தை


வட இந்தியாவில் முதலிடம் பிடித்த விஜய்!
[Wednesday 2016-01-06 07:00]

விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என விஜய்க்கு ரசிகர்கள் பலம் காணப்படுகின்றது.இந்நிலையில் வட இந்தியா இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவில் யார் மாஸ்? என்று ஒரு வாக்குப்பதிவு நடத்தியது. இதில் ரஜினிகாந்த், விஜய், அஜித், மகேஷ் பாபு ஆகியோரை தேந்தெடுத்து இருந்தனர்.இதில் விஜய் 34% வாக்குகளுடன் முதல் இடம் பிடித்தார். 31% வாக்குகளுடன் அஜித் இரண்டாம் இடத்திலும், அடுத்தடுத்த இடத்தில் ரஜினி, மகேஷ் பாபு உள்ளனர்.

Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா