Untitled Document
May 17, 2024 [GMT]
மது அருந்தி விட்டு கலாட்டா செய்த மாதவன்!
[Friday 2016-01-22 22:00]

அலைப்பாயுதே, ரன், தம்பி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் மாதவன். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் இறுதிசுற்று.இப்படத்தில் ஒரு காட்சியில் மது அருந்தி நடிப்பது போல் எடுத்துள்ளனர். இதில் மாதவன் யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மது அருந்தியுள்ளார்.ஒரு கட்டத்திற்கு மேல் அவராலேயே தன்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல் நிதானம் இழந்து பேசியுள்ளார். இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


தல ரசிகர்களை கோபப்படுத்தாதீங்க பிறகு பெரிய விளைவுகள் ஏற்படும்: - மா.கா.பா. ஆனந்தத்
[Friday 2016-01-22 18:00]

சின்னத்திரை தொகுப்பாளர்களில் பலராலும் அறியப்பட்டவர் மா.கா.பா. ஆனந்த். இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சினிமாவில் நடிக்க களத்தில் இறங்கிவிட்டார்.இந்நிலையில் இவர் ஏற்கனவே வானவராயன் வல்லவராயன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது அட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியுள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது, இதில் இவர் அஜித் ரசிகராக நடித்துள்ளார், மேலும்,


பாலா சார் தேவைப்பட்டா துணியை கூட கிழித்துவிடுவார்! - வரலட்சுமி
[Friday 2016-01-22 14:00]

தாரை தப்பட்டை படத்தை பற்றி யார் என்ன சொன்னாலும், வரலட்சுமி நடிப்பை பற்றி யாராலும் பேச முடியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இப்படத்தில் தன் அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் இவர்.இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றி பேட்டியளித்த இவரிடம், படப்பிடிப்பில் பாலா எப்படி என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர்


ப்ரேமம் படத்தினை பாராட்டிய இயக்குனர் சங்கர்!
[Friday 2016-01-22 14:00]

ஷங்கர் தற்போது 2.0 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். சமீபத்தில் இவர் ப்ரேமம் படத்தை பார்த்துள்ளார்.இப்படத்தை பார்த்த பிறகு தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு இப்படம் மிகவும் பிடித்ததாக டுவிட் செய்துள்ளார்.இப்படத்தை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை, சென்னையில் ப்ரேமம் கிட்டத்தட்ட 250வது நாளை எட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் ராம்கியால் என் உயிருக்கு ஆபத்து: - கல்லூரி மாணவி போலீசில் புகார்
[Friday 2016-01-22 07:00]

தமிழ் சினிமாவில் 90களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் ராம்கி. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரியாணி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்நிலையில் இவரின் மீது கல்லூரி மாணவி ஒருவர் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதில்


பிச்சைக்காரன் படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது: - மருத்துவர்கள் கடும் கண்டனம்!
[Thursday 2016-01-21 23:00]

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளுக்கு சமூக சமத்துவக்கான மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். இரவிந்திநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: `பிச்சைக்காரன்


விஜய் நடித்த கில்லி படத்திற்கு பிறகு
[Thursday 2016-01-21 22:00]

விஜய் நடித்துள்ள


சென்னை மக்களுக்கு நன்றி தெரிவித்த மலையாள இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன்!
[Thursday 2016-01-21 17:00]

ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 7 மாதங்கள், 24 நாட்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்போதும் பிரேமம் படம் சென்னையில் பல இடங்களில் ஓடிக் கொண்டிருப்பதால் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னை மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆல்போன்ஸ் புத்திரன்.இப்படத்தின் நடித்த மூன்று நாயகிகளும் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கேரளா அரசின் நிசாகந்தி சாதனையாளர் என்ற விருதை இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கிய முதல்வர் உம்மன்சாண்டி!
[Thursday 2016-01-21 17:00]

கேரளாவின் சுற்றுலாதுறை சார்பில் திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள அவ்விழா வரும் 27ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற இருக்கிறது.இந்த ஆண்டு கேரளா அரசின் நிசாகந்தி சாதனையாளர் என்ற விருதை இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் உம்மன்சாண்டி வழங்கினார்.அப்போது பேசிய உம்மன்சாண்டி, இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளா பெருமைகொள்கிறது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.


சேதுபதி படத்தில் போலிஸ் என்றவுடன் பயந்தேன்: - விஜய் சேதுபதி
[Thursday 2016-01-21 13:00]

விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் பல படங்கள் வரவிருக்கின்றது. இதில் முதலில் சேதுபதி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது, இதில் பேசிய விஜய் சேதுபதி


தெறி படத்தில் தன் மகளை நடிக்க வைத்துள்ள விஜய்!
[Thursday 2016-01-21 12:00]

விஜய் இதுநாள் வரை தன் மகளின் புகைப்படத்தை கூட வெளியே காட்டியது இல்லை. இந்நிலையில் இவர் விஜய்யின் மகளை திரையில் கொண்டு வரவிருக்கின்றாராம்.ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் தன் மகன் சஞ்சயை அறிமுகப்படுத்தினார். தற்போது தெறி படத்தில் தன் மகளை நடிக்க வைத்துள்ளாராம்.இதில் விஜய்க்கு இரண்டு குழந்தைகள் அதில் மீனாவின் மகள் மற்றுமில்லாமல் விஜய்யின் மகளும் நடித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


கதகளி திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: - முடி திருத்துவோர் சங்கம்
[Thursday 2016-01-21 12:00]

கதகளி திரைப்படத்தில் மருத்துவர், வண்ணார், அருந்ததியர் ஆகிய சாதிகளை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை நீக்காவிட்டால், அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக முடிதிருத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் (தஞ்சாவூர், திருவாரூர், நாகை) முடிதிருத்தும் தொழிலாளர் சங்க அவசரக் கூட்டம் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கப் பிரியப்படுகிறேன்: - நமீதா
[Thursday 2016-01-21 12:00]

பொட்டு என்கிற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமீதா. வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தில் பரத், இனியா, மனிஷா யாதவ் போன்றோரும் நடிக்கிறார்கள். அதன் செய்தியாளர் சந்திப்பில் நமீதா கூறியதாவது:கடந்த 13 வருடங்களாக என்னை கவர்ச்சி நடிகையாக எல்லோரும் பார்த்துள்ளார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஒருமாறுதலுக்கு சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா, அதுபோல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக பொட்டு படம் இருக்கும்.


பாபா ராம்தேவுடன் இணைந்து பல வகை யோகாசனம் செய்த ஷில்பா ஷெட்டி!
[Wednesday 2016-01-20 22:00]

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த ஒரு வருடமாக எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் குடும்பம், குழந்தைகள் என்று கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மும்பையில் நடந்து வரும் ஐந்து நாள் யோகாசன கூட்டம் பாபா ராம்தேவ் தலைமையில் நடந்து வந்தது .இதில் இன்று கலந்து கொண்ட ஷில்பா ஷெட்டி ராம்தேவுடன் இணைந்து பல வகை யோகாசனம் செய்தார் , உடனே அங்கு கூடிருந்த ரசிகர்கள் அதை படம்பிடித்து யூடுயூப், வாட்ஸ் அப் , மற்றும் சமுகவலைதளங்களில் பதிவேற்றினர்.இதைத்தொடர்ந்து நம் நெட்டிசன்கள் அதை மீம்ஸ்களாக உருவாக்கி கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். அதீத யோகாசனம் பிரியரான ஷில்பா ஏற்கனவே யோகா குருவுடன் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி பரப்பானது குறிப்பிடத்தக்கது.


தர்மதுரை படத்தில் சொந்தக்குரலில் பேசவிருக்கும் தமன்னா!
[Wednesday 2016-01-20 22:00]

இன்றைய தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்பவர்கள் த்ரிஷா, சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் நடித்த பல படங்களில் சொந்த குரலில் பேசாமலே டப்பிங்கில் வேறு ஒருத்தர் பேசி வந்தனர்.ஆனால் கால போக்கில் புதுமை இயக்குனர்கள் இவர்களை சொந்த குரலில் பேசவைத்து படமாக்கினர், அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது .இந்நிலையில் தற்போது நடிகை தமன்னாவும் இதில் இணைந்துள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் தர்மதுரை படத்தில் கிராமத்து தமிழ் பெண்ணாக சேலை அணிந்து நடித்து வருகிறார். இப்படத்துக்காக தமன்னா சொந்தக்குரலில் பேசவிருக்கிறாராம்


பிச்சைக்காரன் பாடல் சர்ச்சை: - விளக்கமளித்த விஜய் ஆண்டனி!
[Wednesday 2016-01-20 21:00]

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம்


சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை,சட்ட நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்: - வாகை சந்திரசேகர்
[Wednesday 2016-01-20 16:00]

நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என குற்றம்சாட்டி, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள நடிகர் சங்க தலைவர் நாசர் அண்மையில் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள வாகை சந்திரசேகர்,


பில்லா 2 படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைய இருக்கிறாராம் சக்ரி டோலட்டி!
[Wednesday 2016-01-20 15:00]

உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைய இருக்கிறாராம் சக்ரி டோலட்டி. இவர் வேதாளம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது அஜித்தை சந்தித்து கதை கூறியதாகவும் கூறப்படுகிறது.அவர் சொன்ன கதை அலிஜேன்ரோ இன்னாரிடு இயக்கத்தில் சீன் பென் நடித்த 21 Grams படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இந்த படம் அபாயகரமான விபத்து பற்றி கூறும் படமாகும்.அப்படத்தை அஜித்திற்கு ஏற்றார் போல் மாற்றியமைக்க இருக்கிறாராம். ஆனால் இந்த படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை, ஆனால் இப்படம் உறுதியானால் மொத்த சினிமாவிக்கே இது இன்ப செய்தியாக இருக்கும். ஆனால் சக்ரியிடம் இப்படம் பற்றி பிறகு பேசுவோம் என்று அஜித் கூறியதாக கூறப்படுகிறது.


தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் ரயில் திரைப்படம்!
[Wednesday 2016-01-20 13:00]

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் ஒரு புதிய படம் இயக்கி வருகிறார். படத்திற்கு ரயில் என்று பெயர் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.ஆனால் ரயில் என்று வைத்தால் வரிச்சலுகை வராது என்பதனால் தற்போது படத்திற்கு மிரட்டு என்று பெயர் வைத்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்திருக்கிறது.மிரட்டு டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை இம்மாத இறுதிக்குள்ளும், பிப்ரவரியில் படம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனராம்.


காதல் என்பது வெறும் கவர்ச்சி தான்,அந்த மாய வலையில் பலர் இளம் வயதில் மாட்டி கொள்கிறார்கள்: - நடிகை அனுஷ்கா
[Tuesday 2016-01-19 22:00]

நடிகை அனுஷ்கா தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் காதலை பற்றியும் தனது திருமணம் எப்போது என்பதை பற்றியும் பதில் கூறியுள்ளார்."காதல் என்பது வெறும் கவர்ச்சி தான், அந்த மாய வலையில் பலர் இளம் வயதில் மாட்டி கொள்கிறார்கள். எனக்கு காதல் அனுபவம் இல்லை, காதலிக்க நேரமும் இல்லை, பல பேர் இளம் வயதில் காதல் வலையில் சிக்கி பிறகு காலப்போக்கில் அதை யோசித்து பார்த்து சிரிப்பார்கள்.


திருமணத்திற்கு ஓகே சொன்னார் சிம்பு: - பெண்ணுக்கு தன்னை பிடித்தால்தான் திருமணமாம்
[Tuesday 2016-01-19 16:00]

தமிழ் சினிமாவின் மன்மதன் என்றால் அது சிம்பு தான். இதுநாள் வரைக்கும் திருமணம் வேண்டாம் என்று கூறிவந்த சிம்பு, முதன்முறையாக திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளாராம். அதுவும் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.சிம்பு தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களும் உடனடியாக சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


மிக எளிமையான முறையில் நடைபெற்ற விஜய் 60 பட பூஜை!
[Tuesday 2016-01-19 16:00]

விஜய் அட்லீயின் தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.விஜய்யின் 60வது படமான இப்படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை நேற்று விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இயக்குனர் பரதன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.மதி ஒளிப்பதிவையும், பிரவீன் எடிட்டிங்கையும் செய்ய இருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.


கமல்ஹாசன், விக்ரம் இருவரையும் இயக்க ஆசை: -இயக்குனர் மிஷ்கின்
[Tuesday 2016-01-19 15:00]

மிஷ்கின் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அவருடைய படத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் மிஷ்கின் அவர்களுக்கு கமல்ஹாசன், விக்ரம் இருவரையும் இயக்க ஆசையாம்.இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர், கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பு கிடைத்து, கடைசியில் சில பிரச்சனையால் அது கைவிடப்பட்டது.நடிகர் விக்ரமையும் இயக்க ஆசை இருக்கிறது. நான் இருவரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பேன். விக்ரம் சிறிது படங்களே நடித்திருந்தாலும் பெரிய நடிகர் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார். சேது, பிதாமகன் போன்ற படங்கள் இன்றும் பேசப்படுகிறது என்றார்.


நடிகை அசின் - ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் இன்று நடைபெற்றது:
[Tuesday 2016-01-19 15:00]

தமிழில் பிரபல நடிகையாக வலம்வந்த அசின் கஜினி படத்தின் மூலம் பாலிவுட் சென்று அங்கும் பிரபல நடிகையாக மாறினார். இந்தி நடிகர் அக்ஷய்குமார் மூலம் இவருக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவிற்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் நீண்டநாள் காதலர்களாக வலம்வந்த இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர். இன்று காலை டெல்லியில் உள்ள சர்ச்சில் கிறிஸ்துவ முறைப்படி இருவரின் திருமணமும் நடைபெற்றது. இன்று மாலை டெல்லியில் உள்ள பிரபல தசித் தேவரனா ஹோட்டலில் இருவரின் திருமணமும் மீண்டும் ஒருமுறை இந்து முறைப்படி நடைபெறவிருக்கிறது.இதன் மூலம் ஒரே நாளில் இருவரும் 2 முறை திருமணம் செய்து கொள்கின்றனர். அசின்-ராகுல் சர்மா திருமண வரவேற்பு வருகின்ற 23ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் அக்ஷய்குமார் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.திருமணத்திற்குப் பின்னர் அசின் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு நான் வளர வில்லை: - இயக்குனர் பாண்டிராஜ்
[Tuesday 2016-01-19 07:00]

இயக்குனர் பாண்டிராஜ் பசங்க 2 மற்றும் கதகளியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நேற்று பத்திரிகையாளர் சந்தித்து நன்றி தெரிவித்தார். கதகளி மற்றும் பசங்க 2வின் வெற்றி என்னை இன்னும் பொறுப்புள்ளவனாக மாற்றியுள்ளது.அடுத்து இது தான் படம் என்று நான் என்றுமே யோசித்தது கிடையாது. கதைக்கு யார் பொருத்தமோ அவர்களை தான் தேர்வு செய்வேன், ஒரு நடிகருக்காக கதை எழுத வேண்டும் என்றால் எனக்கு தெரியாது என்று கூறினார். மேலும் பத்திரிகையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை வைத்து எப்போது படம் பண்ணுவீர்கள் என்று கேள்விக்கு என் Pasanga Production அவரை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை, அவர் ஏகப்பட்ட விரல்கள் நீட்டுகிறார் என்று கலகலப்பாக கூறினார்.


ஆதிவாசிகளிடம் சிக்கிய பாகுபலி திரைப்பட குழுவினர்!
[Tuesday 2016-01-19 07:00]

பாகுபலியின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது கேரளா மாநிலம் கன்னூரில் நடைபெற்று வந்தது. திடிரென்று அங்கு வசிக்கும் கன்னூர் ஆதிவாசி மக்கள் இங்கு படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று தடை விதித்து வருகின்றனர்.கேரளா அரசு அனுமதி கொடுத்த பிறகு தான் இங்கு படப்பிடிப்பு நடத்த வந்திருக்கிறோம் என்று பல தடவை படக்குழு எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவே இல்லை, பதிலுக்கு கேரளா அரசுக்கு எங்களை பற்றியெல்லாம் கவலையே இல்லை, பணம் கொடுக்கும் ஆளுங்களுக்கு தான் அவர்கள் செயல்படுவார்கள் என்று அரசை கண்டித்தனர்.


காதலர் தினத்தில் ரசிகர்களை மிரட்டவுள்ள இரண்டு விதமான பேய் படங்கள்!
[Monday 2016-01-18 21:00]

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படம்


மீண்டும் இணையும் சிம்பு, நயன்தாரா!
[Monday 2016-01-18 19:00]
பாண்டிராஜ் சிம்பு, நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கியிருந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். பாதியில் நின்றுபோன இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளாராம் பாண்டிராஜ்.படத்திற்கான இசை கோர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றனவாம், அதோடு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட வேண்டுமாம்.இது நம்ம ஆளு படம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் ரிலீசாகிவிடும் என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். வரிசையாக வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வரும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தான் இது நம்ம ஆளு படத்தையும் தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது.
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா