|
|
விஜய் படத்தில் மிரட்டும் வில்லனாக நடிக்கும் மலையாள நடிகர்!
[Wednesday 2016-01-13 13:00]
|
இளைய தளபதி விஜய்க்கு ஏற்கனவே கேரளாவில் ரசிகர்கள் பலம் அதிகம். இதற்காகவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தார்.தற்போது மீண்டும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் பரதன் இயக்கவுள்ளார்.இதில் மம்முட்டி தனி ஒருவன் அரவிந்த் சாமி ஸ்டைலில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
|
|
|
இளையராஜா இசையை கேட்டபடி ஓவியம் வரையும் நிகழ்வு!
[Wednesday 2016-01-13 07:00]
|
நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
|
|
|
எனக்கு திருமணம் நடக்கவில்லை: - வதந்தியை நம்ப வேண்டாம் என்கிறார் அஞ்சலி
[Wednesday 2016-01-13 07:00]
|
நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
|
|
|
[Wednesday 2016-01-13 07:00]
|
கனடாவில் இருந்து பெங்களூரில் இறங்கி அங்கிருந்து நேராய் கார் பிடித்து நள்ளிரவில் கோவை ரேஸ் கோர்ஸ் போலிஸ் நிலையத்தில்
|
|
|
பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தேன்: - டுவிட்டரில் அனிருத்..
[Tuesday 2016-01-12 19:00]
|
பீப் பாடல் பிரச்சனை இன்னும் முடியவே இல்லை. சிம்புவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதுடன், போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.ஆனால் சிம்பு, என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அதோடு போலீஸ் முன்பு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டார். நீதிபதியும் சிம்புவிற்கு வருகிற 29ம் தேதிக்குள் ஆஜராக உத்தரவிட்டார்.இந்நிலையில் அனிருத் நேற்று இரவு 11 மணியளவில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அனிருத் பீப் பாடல் சர்ச்சை தொடர்பாக போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றி என்று தன் டுவிட்டரில் தெரிவித்தார்.
|
|
|
டப்பிங் வேலைகளில் பிஸியான நயன்தாரா!
[Tuesday 2016-01-12 19:00]
|
மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து புதிய நியமம் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தை நயன்தாரா பார்த்திருக்கிறார்.அப்போது தன்னுடைய டப்பிங் சரியாக இல்லை என்பதால், சொந்தக் குரலில் பேச இயக்குனர் எ.கே. சஞ்சனிடம் விருப்பம் தெரிவித்தாராம். அதன்படி டப்பிங் வேலைகளில் நயன்தாரா பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது.
|
|
|
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
[Tuesday 2016-01-12 14:00]
|
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
|
|
|
த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
[Tuesday 2016-01-12 07:00]
|
சினிமாவில் 10 வருடமாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அஸ்வின், த்ரிஷாவின் தீவிர ரசிகராம்.இதனை ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் அவர், நான் 8வது படிக்கும் போது லேசா லேசா படம் வந்தது. நான் மற்றும் எனது நண்பர்கள் ஐந்து பேரும் த்ரிஷா ரசிகர்கள் தான்.அப்போது ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்தோம், ஆனால் அதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.அவரின் புகைப்படங்களை ஒன்றுவிடாமல் சேகரிக்கும் அளவிற்கு தீவிர ரசிகராக இருந்தோம் என்றார்.
|
|
|
காதல் திருமணங்கள் பற்றி மனம் விட்டு பேசிய தமன்னா, சுருதிஹாசன்!
[Tuesday 2016-01-12 07:00]
|
நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் சினிமாவை விட்டு ஒதுங்கி சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். இன்னும் சிலர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்த நிலையில் காதல் திருமணங்கள் சிறந்ததா? என்பதற்கு நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை தமன்னா கூறியதாவது:- காதல், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது. இருவரும் விட்டுக்கொடுக்கணும் நான் உயர்ந்தவர் நீ தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. ஒருவரையொருவர் மதிக்கணும். இதுமாதிரி யார் இருக்கிறார்களோ அங்கு காதல் இருக்கும். எனக்கு இதுவரை காதல் வரவில்லை. காதலிக்க நேரமும் இல்லை. எனக்கு பொருத்தமானவர் யார், அவர் எங்கு இருக்கிறார்? என்று சிந்திக்கவும் நேரம் இல்லை.
|
|
|
தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் நாயகியாக நடிக்கும் த்ரிஷா!
[Tuesday 2016-01-12 07:00]
|
த்ரிஷா சினிமாவில் நுழைந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இவர் இதுவரை பிரபல நடிகரான தனுஷுடம் இணைந்து நடித்ததில்லை.முதன்முறையாக துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷா கமிட்டாகியிருந்தார்.வெளிநாட்டில் இருந்து திரும்பிய த்ரிஷா பொள்ளாச்சி படப்பிடிப்பில் இன்று த்ரிஷா இணைந்துள்ளார். திரிஷாவும், தனுஷும் நடிக்கவேண்டிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட இருக்கிறதாம்.
|
|
|
21 வருடமாக வெற்றிநடைபோடும் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா!
[Tuesday 2016-01-12 00:00]
|
ரஜினிகாந்த் நடிப்பில் எத்தனை படங்களை வந்தாலும் அதில் ஒரே ஒரு படம் மட்டும் ரசிகர்களின் பேவரட் படமாக அமைந்து வருகிறது. சத்யா மூவிஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் என பலர் நடித்த பாட்ஷா படம் தான். இப்படம் இதே நாளில் 21 வருடங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன், விறுவிறுப்பு, காதல் என அத்தனை அம்சங்களும் சரியான கலவையாக வந்திருந்தது பாட்ஷா படம்.
|
|
|
திருமணத்திற்கு தயாராகும் அசின்!
[Monday 2016-01-11 22:00]
|
மலையாள அழகியான நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார். நடிகை அசீனுக்கும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் வருகிற 23
|
|
|
பசங்க-2 படத்தில் நடிக்காததை நினைத்து கவலையடைந்த ஜோதிகா!
[Monday 2016-01-11 15:00]
|
குஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.இந்நிலையில் தற்போது திரையில் வெற்றி நடைப்போடும் பசங்க-2 படத்தில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா தானாம். அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.ஆனால், எல்லோரும் அந்த கதாபாத்திரத்தை புகழ, 'அந்த வாய்ப்பை ஏன் மறுத்தோம்' என எண்ணி வருத்தப்படுகிறாராம்.
|
|
|
விக்கிரம் நடிக்கும்
[Monday 2016-01-11 15:00]
|
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்
|
|
|
விஜய்யுடன் ஜோடி சேரும் மியா ஜார்ஜ்?
[Monday 2016-01-11 14:00]
|
விஜய் தற்போது தனது 59-வது படமாக அட்லி இயக்கும்
|
|
|
பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள்!
[Monday 2016-01-11 14:00]
|
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி முருகன், கெத்து, தாரை தப்பட்டை, கதகளி என 4 படங்கள் திரைக்கு வரவுள்ளது. இப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.தற்போது இப்படங்களின் ரன்னிங் டைம் வெளிவந்துள்ளது. இதில் ரஜினி முருகன் 2 மணி நேரம் 38 நிமிடமும், கதகளி 2 மணி நேரம் 5 நிமிடமும் இருக்குமாம்.அதேபோல் கெத்து 2 மணி நேரம் 8 நிமிடம், தாரை தப்பட்டை 2 மணி நேரம் 5 நிமிடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
|
|
|
குற்றப்பரம்பரை கதையை படமாக்கவுள்ள பாலா!
[Monday 2016-01-11 10:00]
|
தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுப்பவர் பாலா. இவர் இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு தாரை தப்பட்டை படம் திரைக்கு வரவிருக்கின்றது.இப்படத்தை தொடர்ந்து இவர் குற்றப்பரம்பரை கதையை படமாக்கவிருக்கின்றாராம். இக்கதையை பல வருடங்களாக பாரதிராஜா இயக்க விருப்பப்பட்டு முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படம் விஷால், ராணா, அதர்வா, அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் குற்றப்பரம்பரை கதையை படிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளாராம் பாலா.
|
|
|
நடிகர் சங்கத்தில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்: - நடிகர் நந்தா
[Monday 2016-01-11 10:00]
|
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்களை கணக்கெடுத்து அவர்களின் பொருளாதார நிலையை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ
|
|
|
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்: - நடிகை அனுஷ்கா பேட்டி
[Monday 2016-01-11 07:00]
|
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை அனுஷ்கா கூறினார். அனுஷ்கா தமிழ், தெலுங்கில் தயாராகும்
|
|
|
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசும் வாய்ப்பு கமலுக்கு கிடைத்துள்ளது:
[Monday 2016-01-11 07:00]
|
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசும் அரிய வாய்ப்பு கமலுக்கு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு கான்பரன்ஸ் நடக்க உள்ளது. Transition
|
|
|
வருமானவரித்துறைக்கு ஃபிலிம் காட்டிய பாலா..! - என்ன பச்ச புள்ளையா?
[Monday 2016-01-11 07:00]
|
அசந்த நேரம் ஆப்பு வைப்பதில் வருமானவரித்துறைக்கு நிகரில்லை. படம் வெளியாகிற நேரம் பார்த்து படையெடுப்பார்கள். அப்படித்தான் புலி படம் வெளியாகும் நேரம் அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை செய்து கட்டு கட்டாக பணத்தை கைப்பற்றினார்கள். அப்படியொரு ஆபரேஷன் கரன்சியை பாலா அலுவலகத்திலும் நடத்தியது வருமான வரித்துறை. பாலா என்ன பச்ச புள்ளையா...? பணத்தை எல்லாம் மூட்டைகட்டி அலுவலகத்தில் வைக்க? அலுவலகத்தை புரட்டிப் போட்டும் காலணா கிடைக்கவில்லையாம் வந்தவர்களுக்கு. வியாபாரத்தை தாண்டி தனது படத்துக்கு செலவு செய்கிற பாலாவிடம் ஏது பணம் என்று சிலர் உச்சு கொட்டினாலும், பாலா ஒண்ணும் ஓணப்பத்திர ஆண்டி இல்லை என்பது நெருங்கியவர்களுக்கு தெரியும். பிசாசு, சண்டி வீரன் படங்களை தயாரித்தவகையில் எட்டு கோடி அளவுக்கு லாபம் பார்த்தவர் பாலா. வெறும் பெயரை வைத்து எட்டு கோடி சம்பாதிக்கும் நபர் தமிழ் இன்டஸ்ட்ரியிலேயே பாலாவாகத்தான் இருக்கும்.
|
|
|
பெண் தன்மை கொண்டவராக நடிக்கும் விக்ரம்!
[Sunday 2016-01-10 17:00]
|
விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் எடுக்க துணிந்தவர். அந்த வகையில் ஐ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.ஆனால், 10 எண்றதுக்குள்ள படத்தின் மூலம் மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பினார். இதனால், அடுத்து எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.
|
|
|
சூர்யாவின் S3 படத்தில் மாறிய போலிஸ் ஸ்டேஷன்!
[Sunday 2016-01-10 16:00]
|
சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம், சிங்கம்-2. இப்படத்தின் தொடர் பாகமாக S3-யின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது.இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் தொடங்க, சூர்யா, ஸ்ருதி, சூரி, பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.படப்பிடிப்பு தளத்தில் வந்த புகைப்படங்களை பார்க்கையில் பலரும் ஆந்திரா போலிஸ் உடையை அணிந்துள்ளனர்.பொதுவாக சூர்யாவிற்கு ஆந்திராவிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால், அவர்களையும் கவர, இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
|
|
|
பொங்கல் அன்று வெளியாகும் தனுஷ்,சிம்பு படங்கள்!
[Sunday 2016-01-10 09:00]
|
இந்த பொங்கலுக்கு சினிமா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான். அன்று மட்டும் ரஜினி முருகன், கதகளி, கெத்து, தாரை தப்பட்டை என 4 படங்கள் வெளியாக இருக்கிறது.அதேபோல் சிம்பு, தனுஷ் படங்கள் வரவில்லை என்றாலும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. அது என்னவென்றால் தனுஷ், பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கான பஸ்ட் லுக், டைட்டில் வெளியாக இருக்கிறது.அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளி போகாதே பாடல் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலரில் வெளியான பாடலுக்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
|
|
|
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஜோடி சேரும் சமந்தா?
[Sunday 2016-01-10 08:00]
|
இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகர்களாக மாறி வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான தில் ராஜு தயாரிக்க இருக்கும் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கிறார்.
|
|
|
பசங்க 2 படத்தினை திரையரங்கில் பார்ப்பதற்கு 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்!
[Saturday 2016-01-09 23:00]
|
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2. இந்தப் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதற்காக 2டி எண்டர்டெயிண்மென்ட் சார்பாக, பாண்டிராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் சூர்யா. படத்துக்கு மேலும் கூட்டம் வருவதற்காக புதுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பசங்க 2 படத்தைப் பார்க்க வருகிற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் அவர்கள் இந்தப் படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ வந்தால் இலவசமாகப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
மூன்று நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ட்ரைலர்!
[Saturday 2016-01-09 22:00]
|
2016 புத்தாண்டிற்கு வெளியான அச்சம் என்பது மடமையடா ட்ரைலர் மூன்று நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது, சிம்புவின் ரசிகர் பலத்தை மீண்டும் திரைஉலகிற்கு பறைசாற்றியது.இப்போது டிரைலர் வெளியாகி 8 நாளில் 2 மில்லியன் பேர் அதனை பார்வையிட்டுள்ளனர். டிரைலரில் வரும் "தள்ளி போகாதே" பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததும் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகும்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த முழு பாடல் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
லிங்கா படம் ரூ. 158 கோடி வரை வசூல் செய்திருக்கிறது: - கே.எஸ். ரவிக்குமார்
[Saturday 2016-01-09 16:00]
|
லிங்கா படம் வெளியாகி எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தது என்று நாம் அனைவரும் அறிவோம். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், படம் படுதோல்வி என்று சிலர் கூறிவருகின்றனர்.அண்மையில் இதுகுறித்து கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், லிங்கா படம் ரூ. 158 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
|
|
|
|