|
|
வடக்கு விவசாயிகளுக்கு மின்கட்டணம் குறைப்பு!
[Tuesday 2024-03-26 18:00]
|
விவசாயத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
|
|
|
பொது வேட்பாளர் விவகாரம் - தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாராகிறது சிவில் பிரதிநிதிகள் குழு!
[Sunday 2024-05-12 17:00]
|
தமிழ் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழு திட்டமிட்டுள்ளது.
|
|
|
தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? -சிறீதரனிடம் துளாவினார் இந்தியத் தூதுவர்.
[Sunday 2024-05-12 17:00]
|
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றியும், இத்தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழ் மக்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது பற்றியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரனிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கேட்டறிந்துள்ளார்.
|
|
|
பொதுவேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம்! - என்கிறார் சம்பந்தன்.
[Sunday 2024-05-12 17:00]
|
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
|
|
பொது வேட்பாளர் குறித்து ஆராய வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய குழு!
[Sunday 2024-05-12 17:00]
|
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
|
|
|
சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச - வழிவிட்டு ஒதுங்கினார் மைத்திரி!
[Sunday 2024-05-12 17:00]
|
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். கோட்டையில் இடம்பெற்றமைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்கவும் இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|
|
|
தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பம்! - முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.
[Sunday 2024-05-12 17:00]
|
தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.
|
|
|
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி- பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் கைது!
[Sunday 2024-05-12 17:00]
|
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
|
|
|
கூலிப்படையில் இணைந்து கொண்ட 17 இலங்கைப் படையினர் பலி!
[Sunday 2024-05-12 17:00]
|
ரஷ்யா - உக்ரேன் போரில் கூலிப்படையில் இணைந்து கொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
|
|
|
ஆங்கில பாட வினாத்தாளை வட்ஸ்அப்பில் அனுப்பிய ஆசிரியர் கைது!
[Sunday 2024-05-12 17:00]
|
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை!
[Sunday 2024-05-12 17:00]
|
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
|
|
|
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு!
[Sunday 2024-05-12 06:00]
|
15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ளது.
|
|
|
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு சம அங்கீகாரம்!
[Sunday 2024-05-12 05:00]
|
தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இணைந்தாலும், அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
|
|
|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்!
[Sunday 2024-05-12 05:00]
|
ஈழத் தமிழர் வாழ்வில் பெருந்துயர் தோய்ந்த மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவு வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
|
|
|
கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
[Sunday 2024-05-12 05:00]
|
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் சனிக்கிழமைகஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
|
|
|
போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்றவர்கள் கைது!
[Sunday 2024-05-12 05:00]
|
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
|
|
|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - யாழ். பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை நிகழ்வு!
[Sunday 2024-05-12 05:00]
|
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
|
|
|
நாடாளுமன்றத்தில் மேலும் 10 “டயானா”க்கள்!
[Sunday 2024-05-12 05:00]
|
நாட்டில் மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
|
|
|
கதிர்காமம் பாதயாத்திரை செல்வச்சந்நிதியில் இருந்து ஆரம்பம்!
[Sunday 2024-05-12 05:00]
|
தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய- இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை நேற்று காலை 7.30 மணிக்கு தவத்திரு .நா.க.சி .கணபதி கதிர்வேலு திருநீற்று சித்தர் தலைமையில் தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
|
|
|
தேசிய சுதந்திர முன்னணி எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு?
[Sunday 2024-05-12 05:00]
|
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
|
|
|
லதவியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இலங்கையர்கள் கைது!
[Sunday 2024-05-12 05:00]
|
லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதிக்கு புதிய அமெரிக்க தூதுவர் ஆதரவு!
[Saturday 2024-05-11 18:00]
|
இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
|
|
|
2009 இல் இடம்பெற்றது இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்ய வேண்டும்!
[Saturday 2024-05-11 18:00]
|
தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கொல்பேர்ன் முள்ளிவாய்க்காலில் 169,000 தமிழர்கள் கொல்லப்பட்டது, ஒரு இனப்படுகொலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
கிளிநொச்சி, முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
[Saturday 2024-05-11 18:00]
|
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது.
|
|
|
முருகனைக் காண கிளிநொச்சி வந்தார் நளினி!
[Saturday 2024-05-11 18:00]
|
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையான நளினி தனது கணவர் முருகனை பார்ப்பதற்கு கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.
|
|
|
தாளையடியில் குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை!
[Saturday 2024-05-11 18:00]
|
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறை வடக்கு, தாளையடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
தம்மிக்க பெரேராவுடன் கலந்துரையாட மொட்டு முடிவு!
[Saturday 2024-05-11 18:00]
|
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
|
|
|
ஒன்ராறியோவின் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம்!
[Saturday 2024-05-11 18:00]
|
அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டத்துக்கான 'சட்டமூலம்-104' வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதியில் முடிவடையுமாறு ஏழு நாட்களை உள்ளடக்கியதாக 'தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்' (மே 12 - 18) கடைப்பிடிக்கப்படுவதை சட்டமூலம்-104 உறுதிசெய்கிறது.
|
|
|
யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்!
[Saturday 2024-05-11 18:00]
|
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
|
|
|
|