Untitled Document
May 18, 2024 [GMT]
சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
[Sunday 2024-05-05 06:00]

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

  

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாக கடிதம் ஒன்றைக் அனுப்பி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1949 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழமை போன்று ஆவணங்களை சரிபார்த்து விசா வசதிகள் வழங்கப்பட்டன.

1949 முதல் 2012 வரை, ஒரு சில நாடுகளைத் தவிர, சுற்றுலா பயணிகளிடம் இருந்து இலங்கை அரசு விசா கட்டணம் வசூலிக்கவில்லை.

ஆனால் 2012ல் ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்பட்டது.

2012 முதல் 2024 ஏப்ரல் இறுதி வரை, விசா வழங்கும் செயல்முறை தடையின்றி நடந்தது.

எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து நீக்கி VFS GLOBAL என்ற தனியார் நிறுவனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, முதலில் ஒன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilankaevisa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் கீழ் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசாவிற்கு இதுவரை அறவிடப்பட்ட 60 டொலர்கள் 100.5 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த 100.5 டொலர்களில் 75 டொலர்கள் அரசாங்கத்துக்கும், மீதி 25.5 டொலர்கள் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.

மேலும், 2012 முதல் 2024 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், இலங்கைக்கு வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசா கட்டணத்தை அறவிடுவதில்லை என அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்தது.

எனினும், அந்த கொள்கை முடிவை மாற்றி, புதிய முறையின் மூலம் சிறுவர்களுக்கும் 100.5 டொலர் விசா கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கிய வெளிநாட்டுக் குடும்பம் இலங்கைக்கு வரும்போது விசா கட்டணமாக 400 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இங்குள்ள மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், சுற்றுலாப் பயணி ஒருவர் ஒன்லைனில் விசா வசதியைப் பெறும்போது, ​​அது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குத் அறியவந்தாலும் On Arrival முறை மூலம் வரும் சுற்றுலாப் பயணிக்கு வழங்கப்படும் விசா வசதி முதலாவது சந்தர்ப்பத்திலேயே திணைக்களத்திற்கு தெரியவராமை ஆகும்.

இந்நிலைமை 1949 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய SLAITO என்ற பயண முகவர்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலவச விசா வழங்கும் அல்லது குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் போட்டி இடங்களுடன் ஒப்பிடும்போது, ​​சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கி, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!- பிரதான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு.
[Saturday 2024-05-18 04:00]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.



கோட்டாவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு!
[Saturday 2024-05-18 04:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்துக் சர்வதேச விசாரணையே தீர்வு! - உறவுகள் வலியுறுத்தல்.
[Saturday 2024-05-18 04:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட்டிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரம் - குமாரபுரத்தில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 04:00]

திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



மே.18, இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்! - நிமால் விநாயகமூர்த்தி
[Saturday 2024-05-18 04:00]

பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. "எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?" என்னும் ஏக்கத்துடன் எங்கள் மக்கள் மரண உலகின் கைதியானார்கள். உலகம் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பினோம் - எங்களால் முடிந்தது எல்லாம் செய்தோம் - இறுதியில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்னும் செய்தி எங்களுக்கு கிடைத்தது.



மூன்றாவது ஆண்டாக இன அழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சட்டமூலம்-104! Top News
[Saturday 2024-05-18 04:00]

தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் செயல்முறை. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கை அரசானது இனப்படுகொலையின் பாதையிலேயே திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது.



வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
[Saturday 2024-05-18 04:00]

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



வவுனியா இரட்டைக் கொலை - சாட்சிகளை அச்சுறுத்திய பெண் கிராம அலுவலர்!
[Saturday 2024-05-18 04:00]

வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



போர் என்பது வெற்றியல்ல - அது நாட்டினதும் மனித குலத்தினதும் தோல்வி!
[Saturday 2024-05-18 04:00]

போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும். 30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளது. வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.



தெல்லிப்பழையில் நாய் இறைச்சிக் கொத்து? - உணவகத்துக்கு சீல்.
[Saturday 2024-05-18 04:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!
[Friday 2024-05-17 16:00]

திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டுவதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்!
[Friday 2024-05-17 16:00]

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எலிசபெத் வேண்டாம்! - நிராகரியுங்கள் என்கிறார் கம்மன்பில.
[Friday 2024-05-17 16:00]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது டெலோ!
[Friday 2024-05-17 16:00]

தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் போரின் 15 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின், முன்னாள் போராளிகளின் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளின் குடும்பங்களை இன்று சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.



மூன்று மீனவர்களுடன் சம்பில்துறையில் கரையொதுங்கியது இந்தியப் படகு!
[Friday 2024-05-17 16:00]

தமிழகம்- மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது. பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர். குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நினைவேந்தல்களை தடுக்க வேண்டாம்! - என்கிறார் மைத்திரி
[Friday 2024-05-17 16:00]

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.



நாடு நல்ல நிலையை அடைந்த பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு!
[Friday 2024-05-17 16:00]

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.



சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவத் தளபதி!
[Friday 2024-05-17 16:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.



தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்!
[Friday 2024-05-17 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா