Untitled Document
May 22, 2024 [GMT]
2,976 ஆபாச வீடியோ: பிரஜ்வல்லின் அந்தரங்க பென்டிரைவ் மாஜி டிரைவரிடம் சிக்கியது எப்படி?
[Wednesday 2024-05-01 07:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

  

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. ஜேடிஎஸ் எம்எல்ஏவாக உள்ள ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்பியாக மீண்டும் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலுக்கு முன்பு ஹாசன் தொகுதி முழுவதும் பென் டிரைவ்கள் வினியோகம் செய்யப்பட்டன. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. மொத்தம் 2,976 ஆபா வீடியோக்கள் இருந்துள்ளன. அதில் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றுவிட்டார். தற்போது எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா நேற்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். என் மருமகள் நடத்தை தான் சரியில்லை! பிரஜ்வல், ரேவண்ணா மீது செக்ஸ் புகாரளித்த பெண்ணின் மாமியார் தடாலடி இதற்கிடையே தான் வீடியோ எப்படி வெளியானது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ரேவண்ணா குடும்பத்தில் டிரைவராக இருந்த கார்த்திக்தான் இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக பிரமுகர் தேவராஜே கவுடா (ரேவண்ணாவை எதிர்த்து பாஜக சார்பில் ஹேலேநரசிப்புரா தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்) வழங்கியதாகவும், ஆனால் இப்போது அந்த வீடியோவை நான் வெளியிடவில்லை எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியானதற்கு கார்த்திக் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இப்போது வெளியிட்டது பாஜகவின் தேவராஜே கவுடாவா? இல்லையென்றால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியினரிடம் பென் ட்ரைவை வழங்கினாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும், முன்னாள் டிரைவர் கார்த்திக்கிற்கும் இடையேயான உறவு, பிரச்சனை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கார்த்திக்கின் சொந்த ஊர் ஹோலோநரசிப்புரா. இந்த தொகுதியின் எம்எல்ஏ தான் ரேவண்ணா. இந்நிலையில் தான் ரேவண்ணாவின் குடும்பத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் ரேவண்ணாவின் குடும்பத்தில் உள்ள அனைவருடன் நெருக்கமாக பழகினார். சொல்லப்போனால் ரேவண்ணாவின் குடும்ப உறுப்பினர் போன்றே அவர் இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போன் உள்பட பிற எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட பலவற்றை கையாளும் வகையில் அவர் அதிகாரமிக்கவராக வலம் வந்தார்.

இதன் மூலம் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவை கார்த்திக் பார்த்து பென்ட்ரைவில் ‛காப்பி' செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்களை வெளியிட்டது பாஜகவா? பழி தீர்த்தது புட்டசாமி கவுடா குடும்பமா? மேலும் கடந்த 2023ம் ஆண்டு தான் பிரஜ்வல் மற்றும் கார்த்திக் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதாவது கார்த்திக்கின் தாய் பெயரில் 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரஜ்வல் ரேவண்ணா அபகரித்துள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் அவரது தாய் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா கார்த்திக் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் கார்த்திக் , ரேவண்ணாவின் குடும்பத்தை விட்டு விலகினார்.

இதற்கிடையே தான் கடந்த ஆண்டு ஜுன் மாதம் சில ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பாக வெளியானது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா, கார்த்திக் உள்பட 3 தனிநபர்கள் மற்றும் மீடியாக்களின் பெயரை குறிப்பிட்டு தடை வாங்கி இருந்தார். இதுதான் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பாக ஆபாச வீடியோ, போட்டோ பிரச்சனையின் முதல் படியாகும். அதன்பிறகு கடந்த 2023 டிசம்பர் மாதம் பிரஜ்வல் ரேவண்ணா தன்னையும், மனைவியையும் கடத்தியதாக கார்த்திக் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜனவரியில் இந்த வீடியோ விவகாரம் மீண்டும் கிளம்பியது. அதாவது பாஜக பிரமுகரும், ஹோலேநரசிப்புரா தொகுதியில் கடந்த ஆண்டு ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் தேவராஜே கவுடா மூலம் இந்த வீடியோ விவகாரம் கிளப்பினார்.

அதாவது பிரஜ்வல்லை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த சமயத்தில் அவர் அளித்த பேட்டியில், ‛‛ரேவண்ணா என்னை மோசமானவர் என அழைக்கிறார். ஆனால் அவரது மகன் மிகவும் மோசமானவர். ஆபாச வீடியோ, போட்டோக்கள் வெளியான வழக்கில் அவர் தடை வாங்கி உள்ளார். பெண் ஒருவருடன் நான் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அவர்களால் காட்ட முடியுமா?. ஆனால் என்னால் முடியும். மேலும் நான் அவர்களை போல் அல்லாமல் தினமும் என் வீட்டுக்கு செல்பவன். ரேவண்ணா மகன் பிரஜ்வல்லின் ஆபாச வீடியோ, போட்டோக்கள் பற்றி அவர்களின் முன்னாள் டிரைவர் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

ஆனாலும் டிரைவருக்கு எப்படி அந்த வீடியோ கிடைத்தது என்பது தெரியவில்லை'' என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் இந்த குற்றச்சாட்டை கார்த்திக் இதற்கு முன்பு மறுத்து இருந்தார். இதையடுத்து தேவராஜே கவுடா பாதிக்கப்பட்ட பெண்களை பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்த முயன்றார். ஆனால் கடைசி நேரத்தில் பெண்கள் வரவில்லை. இது தேவராஜே கவுடாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பெண்களின் மானத்தை கருதி நான் வீடியோ வெளியிடவில்லை. மேலும் வீடியோ வெளியிட்டால் அது அவர்களின் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் எந்த பெண்ணாவது தற்கொலை செய்தால் யார் பொறுப்பேற்க முடியும்?'' என தெரிவித்து இருந்தார்.

ஆனால் ஹாசன் தொகுதி தேர்தலுக்கு ஒருநாள் முன்பாகவே அந்த தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாின் ஆபாச வீடியோ அடங்கிய பென் ட்ரைவ் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு அதில் உள்ள வீடியோக்கள் வலைதளங்களில் பரப்பப்பட்டன. இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாஜி டிரைவர் கார்த்திக் அளித்த பேட்டியில், நான் ஆபாச வீடியோ பென்ட்ரைவை தேவராஜே கவுடாவிடம் மட்டுமே வழங்கி உள்ளதாகவும், தான் வீடியோ பரபரப்பவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் தேவராஜே கவுடா, கார்த்திக் தான் பென்ட்ரைவை காங்கிரஸிடம் வழங்கி வெளியிட்டு இருக்கலாம் என்கிறார். இவர்கள் கார்த்திக், தேவராஜே கவுடா இடையே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் வீடியோவை பரப்பியது தொடர்பாக இருவரிடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



வெறும் கையால் மனிதக்கழிவை அகற்றும் பணியாளர்: சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி!
[Tuesday 2024-05-21 18:00]

மதுரையில் மனிதக் கழிவுகளை ஒப்பந்த பணியாளர் வெறும் கைகளாலே சுத்தம் செய்யும் காட்சிகள் இணையத்தில்வைரலாகி வருகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றது. பாதாள சாக்கடைக்கு உள்ளே இறங்கி மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.



தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-05-21 18:00]

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.



“தமிழர்கள் மீது மோடிக்கு வெறுப்பு ஏன்?” - முதல்வர் ஸ்டாலின்!
[Tuesday 2024-05-21 18:00]

ஒடிசாவில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நேற்று (20.05.2024) கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நமது வீடுகளின் சாவிகள் தொலைந்து போனால், ஜெகநாதரைப் பிரார்த்தனை செய்து, இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஓரிரு மணி நேரத்தில் அவற்றைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால் பகவான் ஜகந்நாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.



இர்ஃபான் மீது பாய்ந்தது தமிழக அரசின் நடவடிக்கை!
[Tuesday 2024-05-21 18:00]

யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது தமிழக மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான், திருமணம் செய்து கொண்டு பல்வேறு வீடியோக்களை மனைவியுடன் இணைந்து வெளியிடுவார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.



ராகுல் காந்தியால் ஆக முடியுமா? - அமித்ஷா விமர்சனம்!
[Tuesday 2024-05-21 06:00]

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு கட்டமாக 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று (20-05-24) மாலை நடந்து முடிந்தது.



‘7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் எச்சரிக்கை!
[Tuesday 2024-05-21 06:00]

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (22.05.2024) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.



“சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதில்லை” - பிரதமர் மோடி!
[Tuesday 2024-05-21 06:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் கைது!
[Monday 2024-05-20 18:00]

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையர்கள் எனவும் அவர்கள் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



மக்களுக்கு உதவுவதற்காக 'த.வெ.க’ தலைவர் விஜய் எடுத்த அடுத்த முடிவு!
[Monday 2024-05-20 18:00]

'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய் மக்களுக்காக புதிய விடயம் ஒன்றை செய்யவுள்ளார். நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.



வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.9900 கோடி: குழப்பத்தில் விவசாயி எடுத்த முடிவு!
[Monday 2024-05-20 18:00]

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9900 கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி பானுபிரகாஷ். இவர், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சோதித்து பார்த்துள்ளார். அப்போது தான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



சீமானின் வீடியோவை வெளியிடப்போவதாக பரபரப்பை கிளப்பும் விஜயலட்சுமி!
[Monday 2024-05-20 18:00]

நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்டம் போட்ட அனைத்து வீடியோக்களையும் வெளியிடப்போவதாக நடிகை விஜயலட்சுமி பரபரப்பை கிளப்பியுள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக புகார் கொடுத்த விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.



தங்கையை அழைத்துவரச் சொன்ன நண்பன்: படுகொலை செய்த அண்ணன்!
[Monday 2024-05-20 06:00]

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ரஞ்சித் குமார். இவருக்குச் சரவணன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்த நிலையில் ரஞ்சித் சரவணன் வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது ரஞ்சித் குமாரிடம் சரவணன் உனது தங்கையை அழைத்துவா என்று தவறான நோக்கத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.



கட்டுக்கடங்காத கூட்டம்: பாதியில் திரும்பிச் சென்ற ராகுல் - அகிலேஷ்!
[Monday 2024-05-20 06:00]

நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கும் வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு: சென்னையில் பரபரப்பு!
[Monday 2024-05-20 06:00]

சென்னையில் பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் படுத்து உறங்கிகொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இரவும் சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது சுமார் 9 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய ஆசிட் பாட்டிலை வீசியுள்ளார். பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.



பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!
[Sunday 2024-05-19 19:00]

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



பட்டாக்கத்தியுடன் குத்தாட்டம்: காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்!
[Sunday 2024-05-19 19:00]

திருவண்ணாமலை நகரம் சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், வேங்கிகால் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர்கள் மூவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிறைக்கு போய்வந்தும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.



‘தென்மேற்கு பருவமழை தொடங்கியது’ - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
[Sunday 2024-05-19 19:00]

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.



‘2 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுந்தகவல்’ - தமிழக அரசு!
[Sunday 2024-05-19 19:00]

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (19.05.2024) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (20.05.2024) மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.



தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Sunday 2024-05-19 08:00]

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.



அயலக தமிழர்கள் கவனத்திற்கு: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
[Sunday 2024-05-19 08:00]

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணையலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வேலைவாய்ப்பு. கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.


NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா