Untitled Document
May 9, 2024 [GMT]
ஒட்டாவா படுகொலைகள் - விசாரணைக்கு திகதி குறிப்பு!
[Saturday 2024-04-27 06:00]


கனடா - ஒட்டாவா Barrhaven பகுதியில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரிடம் முதற்கட்ட விசாரணைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கனடா - ஒட்டாவா Barrhaven பகுதியில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரிடம் முதற்கட்ட விசாரணைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  

கடந்த மார்ச் மாதம் ஆரம்ப பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் 19 வயதான பெப்ரியோ டி-சொய்சா என்ற இலங்கை மாணவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க, ஏழு வயதான இனுகா விக்கிரமசிங்க,நான்கு வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, இரண்டு வயதான ரின்யான விக்கிரமசிங்க, இரண்டரை மாத குழந்தையான கெல்லி விக்கிரமசிங்க என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் டிலந்திகா ஏக்கநாயக்கவின் கணவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பெப்ரியோ டி-சொய்சாவுக்கு எதிராக ஆறு கொலைகள் மற்றும் ஒரு கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் தீவிர பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதுடன், தனது கட்சிக்காரருக்கு பிணை கோரும் திட்டம் எதுவும் இல்லை என்று பெப்ரியோ டி-சொய்சாவின் சட்டத்தரணிகள் கடந்த வாரம் நீதிமன்றில் கூறியிருந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான சொய்சாவின் சட்டத்தரணிகள் வழக்கிற்கு முன்னரான விசாரணைகளை 2025 ஏப்ரல் மாதத்திலும், 2025 மே 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் கண்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகளின் தீவிரம் காரணமாக சந்தேகநபர் தீவிர பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



முல்லைத்தீவை சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள்!
[Thursday 2024-05-09 05:00]

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் புதன்கிழமை இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.



ஐ.பி.எல் போட்டியில் அறிமுகமானார் யாழ்ப்பாண சுழற்பந்துவீச்சாளர் வியாஸ்காந்த்!
[Thursday 2024-05-09 05:00]

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ.பி.எல் போட்டியில் நேற்று முதல் முறையாக விளையாடினார்.



நோர்வேயில் காருக்குள் எரிந்த நிலையில் புலம்பெயர் தமிழரின் சடலம்!
[Thursday 2024-05-09 05:00]

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



வவுனியாவில் பறிபோகும் தமிழர் நிலம்- திரைமறைவில் காய் நகர்த்தும் இராஜாங்க அமைச்சர்! Top News
[Thursday 2024-05-09 05:00]

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் துணையுடன் தமிழ் கிராமங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிகழ்வு தற்போது திரைமறைவில் அரங்கேறி வருகிறது.



உள்ளூராட்சி மட்டத்தில் குழுக்களை உருவாக்க அரசாங்கம் முயற்சி! - சஜித் குற்றச்சாட்டு.
[Thursday 2024-05-09 05:00]

தேர்தலை இலக்கு வைத்து, தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு 10 மில்லியன் ரூபா வீதம், 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 3410 மில்லியனை ஒதுக்கீடு செய்து தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



டயானாவின் தலைவலி தீர்ந்தது!
[Thursday 2024-05-09 05:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எமது வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.டயனா கமகே கைச்சாத்திடவில்லை.எமது வேட்பு மனு சட்டப்பூர்வமானது என்பதை உயர் நீதிமன்றமும்,தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது.ஆகவே எமது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.



சட்டவிரோதமாக செல்வோருக்கு இராஜதந்திர ஆதரவு கிடைக்காது!
[Thursday 2024-05-09 05:00]

திறந்த விசா, சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதை இளைஞர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் சென்று நெருக்கடிக்குள்ளானால் இராஜதந்திர மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.



மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர்!
[Thursday 2024-05-09 05:00]

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.



மீண்டும் காட்டுச் சட்டத்தை அமுல்படுத்த தயாராகிறது ஜேவிபி!
[Thursday 2024-05-09 05:00]

தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி.யின் கூற்று கிராமங்களில் மீண்டும் காட்டுச்சட்டத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். .



10 ஆண்டுகளில் 840 மில்லியன் டொலர்களைச் சுருட்டப் போகும் வி.எப்.எஸ் நிறுவனம்!
[Thursday 2024-05-09 05:00]

மத்திய வங்கி பிணைமுறி மோசடியைக் காட்டிலும் 25 மடங்கான மோசடி புதிய விசா முறைமை ஊடாக இடம்பெறும்.வி.எப்.எஸ் வெளிநாட்டு நிறுவனம் 10 ஆண்டுகால சேவையில் மாத்திரம் 841 மில்லியன் டொலர் இலாபமடையும்.



டயானாவின் எம்.பி பதவியைப் பறித்தது உயர்நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாகதம்பிரான் வழிபாட்டை தடுத்து சப்த நாக விகாரையாக மாற்றம்! Top News
[Wednesday 2024-05-08 19:00]

குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.



மகாவலி அபிவிருத்தியின் பெயரால் நில ஆக்கிரமிப்பு! - மணலாறு மக்கள் போராட்டம். Top News
[Wednesday 2024-05-08 19:00]

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



ஜூனுக்குள் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு!
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அரச தலைவர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.



நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூகுள், யூடியூப் மீது வழக்குகளை தாக்கல் செய்தார் இராணுவத் தளபதி!
[Wednesday 2024-05-08 19:00]

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.



மன்னாரில் காற்றாலை மின்திட்டத்துக்கு அனுமதி - பிரஜைகள் குழு எதிர்ப்பு.
[Wednesday 2024-05-08 19:00]

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.



உக்ரைன்- ரஷ்ய போர்முனைக்கு கூலிப்படைகளாக செல்லாதீர்கள்! - சவேந்திர சில்வா கோரிக்கை.
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.



டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட இராணுவ மேஜர்!
[Wednesday 2024-05-08 19:00]

மட்டக்களப்பில் ஒருவரிடம் கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக அச்சுறுத்தி மிரட்டிவருவதாக பாதிக்கப்பட்டவர் 6 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



2100 கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம்!
[Wednesday 2024-05-08 19:00]

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில், இன்று நடைபெற்றது.


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா