Untitled Document
May 9, 2024 [GMT]
எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது!
[Saturday 2024-04-27 06:00]


நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும்  எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என  இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தேர்தல் ஆண்டு என்ற அடிப்படையில் எதிர்கட்சியினரும் வேறு சிலரும் மரணித்த அந்த ஜீவன்களை மையப்படுத்தி இன்னமும் விவாதப் பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் அரசியலுக்காக என் மீதும் கை நீட்டுவதனை இங்கு அவதானித்தேன். அவர்களைப்பற்றி என்னால் கவலை மட்டும்தான் அடைய முடியும். எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத் தயராகவே இருக்கின்றேன்.

2012 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மதப்பயங்கரவாத விடயம் மெல்ல மெல்ல வெளியே வரத்தொடங்கியது அதற்கு பௌத்த பேரினவாத சில சாதுக்களும் கடும் போக்காக பேசினார்கள். அதையொட்டி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களில் ஆங்காங்கே சில விடயங்கள் நடக்கத்தொடங்கின. ஐ எஸ் ஐ எஸ் பயங்காரவாதம் உலகத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில்தான் இங்கும் ஆட்சி மாற்றங்கள் நடந்தன . அப்போது ஆட்சியை பொறுப்பெடுத்தவர்கள் இதனை சரியாக கண்டு கொள்ளவில்லை.

இங்கு சனல் 4 சம்பந்தமாக பொதுவாக பேசுவார்கள். இந்த நிறுவனம் இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் அறியப்பட்ட நிறுவனம்.

இந்தக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 8 பேரை வைத்து சத்தியப்பிரமாணம் செய்யும் சஹ்ரான் '' நான் இஸ்லாத்துக்காக மரணிக்கின்றேன்,அல்லாஹ்வின் கொள்கையை பின்பற்றி மரணிக்கின்றேன், எனது இரத்தம்,சதை எல்லாவற்றையும் நான் அதற்காக அர்ப்பணிக்கின்றேன்,இது போராட்டத்துக்கான ஆரம்பம், எமது மதத்திற்கு எதிரான எல்லோரும் காபிர்கள், மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் கொல்லப்பட வேண்டும்,

அவுஸ்திரேலியாவில் எங்களைக்கொன்று விட்டு இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை எல்லாம் கொல்லுங்கள்,கண்ட இடத்தில் கொல்வதுதான் எங்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை ''என அழகாக வாக்குமூலம் அளித்திருந்தார். இவையெல்லாம் கடந்து சிறிய சிறிய துண்டு விடயங்களை பிடித்துக்கொண்டு இங்கு பேசுகின்றார்கள்.

சனல் 4 வில் காட்டுகின்றபோது அது ஒரு பிசுபிசுப்பான நாடகம். அந்த சனல் 4 தயாரிப்பாளரிடம் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய . இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டார். அதற்கு அவர் எதுவும் இல்லை என்றார்.

ஆகவே இதில் எனது பெயரையும் இழுக்கின்றார்கள். சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன்.

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. இங்கு உள்ள ஒரு பிஞ்சு பிள்ளை மக்களைக் குழப்புகிறது. எனவே மக்களை குழப்ப வேண்டாம் என சாணக்கியன் போன்ற சிறு பிள்ளைகளுக்கு கூற விரும்புகின்றேன் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



முல்லைத்தீவு சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள்!
[Thursday 2024-05-09 05:00]

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் புதன்கிழமை இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.



ஐ.பி.எல் போட்டியில் அறிமுகமானார் யாழ்ப்பாண சுழற்பந்துவீச்சாளர் வியாஸ்காந்த்!
[Thursday 2024-05-09 05:00]

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ.பி.எல் போட்டியில் நேற்று முதல் முறையாக விளையாடினார்.



நோர்வேயில் காருக்குள் எரிந்த நிலையில் புலம்பெயர் தமிழரின் சடலம்!
[Thursday 2024-05-09 05:00]

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



வவுனியாவில் பறிபோகும் தமிழர் நிலம்- திரைமறைவில் காய் நகர்த்தும் இராஜாங்க அமைச்சர்! Top News
[Thursday 2024-05-09 05:00]

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் துணையுடன் தமிழ் கிராமங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிகழ்வு தற்போது திரைமறைவில் அரங்கேறி வருகிறது.



உள்ளூராட்சி மட்டத்தில் குழுக்களை உருவாக்க அரசாங்கம் முயற்சி! - சஜித் குற்றச்சாட்டு.
[Thursday 2024-05-09 05:00]

தேர்தலை இலக்கு வைத்து, தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு 10 மில்லியன் ரூபா வீதம், 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 3410 மில்லியனை ஒதுக்கீடு செய்து தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



டயானாவின் தலைவலி தீர்ந்தது!
[Thursday 2024-05-09 05:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எமது வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.டயனா கமகே கைச்சாத்திடவில்லை.எமது வேட்பு மனு சட்டப்பூர்வமானது என்பதை உயர் நீதிமன்றமும்,தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது.ஆகவே எமது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.



சட்டவிரோதமாக செல்வோருக்கு இராஜதந்திர ஆதரவு கிடைக்காது!
[Thursday 2024-05-09 05:00]

திறந்த விசா, சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதை இளைஞர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் சென்று நெருக்கடிக்குள்ளானால் இராஜதந்திர மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.



மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர்!
[Thursday 2024-05-09 05:00]

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.



மீண்டும் காட்டுச் சட்டத்தை அமுல்படுத்த தயாராகிறது ஜேவிபி!
[Thursday 2024-05-09 05:00]

தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி.யின் கூற்று கிராமங்களில் மீண்டும் காட்டுச்சட்டத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். .



10 ஆண்டுகளில் 840 மில்லியன் டொலர்களைச் சுருட்டப் போகும் வி.எப்.எஸ் நிறுவனம்!
[Thursday 2024-05-09 05:00]

மத்திய வங்கி பிணைமுறி மோசடியைக் காட்டிலும் 25 மடங்கான மோசடி புதிய விசா முறைமை ஊடாக இடம்பெறும்.வி.எப்.எஸ் வெளிநாட்டு நிறுவனம் 10 ஆண்டுகால சேவையில் மாத்திரம் 841 மில்லியன் டொலர் இலாபமடையும்.



டயானாவின் எம்.பி பதவியைப் பறித்தது உயர்நீதிமன்றம்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாகதம்பிரான் வழிபாட்டை தடுத்து சப்த நாக விகாரையாக மாற்றம்! Top News
[Wednesday 2024-05-08 19:00]

குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.



மகாவலி அபிவிருத்தியின் பெயரால் நில ஆக்கிரமிப்பு! - மணலாறு மக்கள் போராட்டம். Top News
[Wednesday 2024-05-08 19:00]

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



ஜூனுக்குள் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு!
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அரச தலைவர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.



நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூகுள், யூடியூப் மீது வழக்குகளை தாக்கல் செய்தார் இராணுவத் தளபதி!
[Wednesday 2024-05-08 19:00]

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.



மன்னாரில் காற்றாலை மின்திட்டத்துக்கு அனுமதி - பிரஜைகள் குழு எதிர்ப்பு.
[Wednesday 2024-05-08 19:00]

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.



உக்ரைன்- ரஷ்ய போர்முனைக்கு கூலிப்படைகளாக செல்லாதீர்கள்! - சவேந்திர சில்வா கோரிக்கை.
[Wednesday 2024-05-08 19:00]

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.



டயானாவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்!
[Wednesday 2024-05-08 19:00]

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட இராணுவ மேஜர்!
[Wednesday 2024-05-08 19:00]

மட்டக்களப்பில் ஒருவரிடம் கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக அச்சுறுத்தி மிரட்டிவருவதாக பாதிக்கப்பட்டவர் 6 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



2100 கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம்!
[Wednesday 2024-05-08 19:00]

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில், இன்று நடைபெற்றது.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா