Untitled Document
May 4, 2024 [GMT]
வெளியுலக மக்களைக் கண்டாலே கடுமையாக தாக்கும் ஆதிவாசிகள்!
[Monday 2024-04-22 18:00]

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் ஒன்று வட சென்டினல் தீவு. அங்கு, Sentinelese என்னும் ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. 2006ஆம் ஆண்டு, இந்திய மீனவர்கள் சிலர் அந்த தீவின் அருகில் சட்ட விரோதமாக நண்டு பிடிக்கச் சென்றுள்ளார்கள். அவர்களில் சுந்தர் ராஜ் (48) மற்றும் பண்டித் திவாரி (52) என்னும் இருவர் இரவில் படகில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு தங்கள் படகுகளிலேயே தூங்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் தூங்கும்போது, படகு மெல்ல நகர்ந்து சென்டினல் தீவின் அருகே சென்றுவிட்டிருக்கிறது.

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் ஒன்று வட சென்டினல் தீவு. அங்கு, Sentinelese என்னும் ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. 2006ஆம் ஆண்டு, இந்திய மீனவர்கள் சிலர் அந்த தீவின் அருகில் சட்ட விரோதமாக நண்டு பிடிக்கச் சென்றுள்ளார்கள். அவர்களில் சுந்தர் ராஜ் (48) மற்றும் பண்டித் திவாரி (52) என்னும் இருவர் இரவில் படகில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு தங்கள் படகுகளிலேயே தூங்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் தூங்கும்போது, படகு மெல்ல நகர்ந்து சென்டினல் தீவின் அருகே சென்றுவிட்டிருக்கிறது.

  

மறுநாள் காலை, அவர்களுடைய சக மீனவர்கள் கண்விழித்துப் பார்க்கும்போது, சுந்தர் ராஜ் மற்றும் பண்டித் திவாரியின் படகு சென்டினல் தீவுக்கு அருகே இருப்பதைக் கண்டு சத்தமிட்டு அவர்களை எழுப்ப முயன்றிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களை எழுப்பமுடியவில்லை. அந்த ஆதிவாசிகள் அவர்களைப் பிடித்துக் கொன்று மூங்கில் கம்பங்களில் குத்தித் தொங்கவிட்டுவிட்டார்கள்.

அதற்குப் பின், 2018ஆம் ஆண்டு, கிறிஸ்தவ மிஷனெரியான John Allen Chau என்பவர் அந்தத் தீவினரை சந்திக்க முயன்றிருக்கிறார், அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.

எதனால் இந்த வட சென்டினல் தீவில் வாழும் ஆதிவாசிகள் யாரையும் தங்கள் தீவில் கால்வைக்க விடமாட்டேன்கிறார்கள் என்பது நீண்ட காலத்துக்கு தெரியாத விடயமாகவே இருந்தது.

ஆனால், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தின் பின்னணியில் மோசமான ஒரு சம்பவம் உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஆம், அந்தமானில் இருந்த சிறை ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்தவரான மாரிஸ் (Maurice Vidal Portman) என்னும் கனேடிய பிரித்தானியர், இந்த வட சென்டினல் தீவில் வாழும் ஆதிவாசிகள் சிலரைக் கடத்திச் சென்றுள்ளார்.

விடயம் என்னவென்றால், வெளியுலகில் வாழும் மக்களுக்கு சாதாரணமாக வரும் நோய்களைக் கூட இந்த ஆதிவாசிகளால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே, அவர் கடத்திவந்தவர்களில், வயதுவந்த இருவர் உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி, அந்த ஆதிவாசிகள் மற்றும் அந்த பகுதியிலுள்ள ஆதிவாசிகள் பலரை மோசமான முறையில் புகைப்படம் எடுத்துள்ளார் மாரிஸ். குறிப்பாக அவர்களுடைய பாலின உறுப்புக்களை குறிவைத்தே அவர் புகைப்படம் எடுத்தார் என்பது சமீபத்தில் வெளியாகியுள்ள வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

அத்துடன், தான் கடத்திவந்தவர்களில் உயிர் பிழைத்த சிறுவர்களை அவர் மீண்டும் வட சென்டினல் தீவுக்கே அனுப்ப, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கொடிய நோய்கள் பரவியதாக கூறப்படுகிறது.

ஆக, தங்கள் மக்களைக் கடத்திச் சென்றவர்கள் அனுபவித்த அவமானம் மற்றும் அவர்களால் பரவிய நோய்கள் போன்ற மோசமான விடயங்களே, வெளி உலக மக்கள் மீது அவர்களுக்கு வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. ஆகவேதான், வெளியுலகைச் சேர்ந்த யார் தங்கள் தீவுக்கருகே வந்தாலும், அவர்களை வட சென்டினல் தீவில் வாழ்பவர்கள் தாக்குகிறார்கள் போலும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

விடயம் என்னவென்றால், பின்னொருமுறை, மீண்டும் வட சென்டினல் தீவுக்குச் சென்று அந்த மக்களை சந்திக்க முயன்றாராம் மாரிஸ். ஆனால், அவரைக் கண்டதுமே காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்களாம் அந்த தீவுவாசிகள்!

  
   Bookmark and Share Seithy.com



14 கோடி மைல் தூரத்தில் இருந்து லேசர் சிக்னல்: நாசா சொன்ன மகிழ்ச்சியான தகவல்!
[Saturday 2024-05-04 07:00]

நாசா, விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து லேசர் சிக்னலை வெற்றிகரமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது டி.எஸ்.ஓ.சி (Deep Space Optical Communication) என்ற புதிய தொழில்நுட்பத்தின் சாதனை ஆகும். சைக் விண்கலம்) 2023 ஆம் ஆண்டு அக்டோபரில், சைக் 16 என்ற சிறுகோளை ஆய்வு செய்ய நாசா சைக் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.



கனடாவில் சீக்கியர் தலைவர் கொலை வழக்கு: திடீர் திருப்பமாக 3 பேர் கைது!
[Saturday 2024-05-04 07:00]

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளரின் கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்பீர் சிங் நிஜ்ஜருடன் தொடர்புடைய கொலை வழக்கில் மூன்று நபர்களை கனடா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



பிரித்தானிய சிறுவன் கொலை வழக்கு: பதின்ம வயதினர் குற்றவாளி என தீர்ப்பு!
[Saturday 2024-05-04 07:00]

பிரித்தானியாவில் இளைஞர் ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில், 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது இளைஞர் ஆல்ஃபி லூயிஸைக்(Alfie Lewis) கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



நோர்வேயில் சிறந்த விருதை வென்ற இலங்கையின் முதல் தமிழ் பெண்!
[Friday 2024-05-03 18:00]

யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான விருதை வழங்கியிருக்கிறது. “ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த பாடல் இது.



கனடாவில் சந்தேக நபரை துரத்திய பொலிசாரால் நான்கு உயிர்கள் பலி!
[Friday 2024-05-03 18:00]

கனடாவில், மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அதனால் ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் பலியான சம்பவத்தில், பலியானவர்கள் பேரக்குழந்தையைப் பார்க்க கனடா சென்ற இந்திய தம்பதியர் என்றும், அவர்கள் பார்க்கச் சென்ற அந்தக் குழந்தையும் விபத்தில் பலியாகிவிட்டதாகவும், அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.



பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து!
[Friday 2024-05-03 18:00]

பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், 30 ஆண்டுகளில், முதன்முறையாக மோசமான முடிவுகளை சந்தித்துள்ளது பிரதமர் ரிஷி சார்ந்த, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி. 1995க்குப் பிறகு கன்சர்வேட்டி கட்சி இப்படி ஒரு தோல்வியை இப்போதுதான் சந்திக்கிறது. தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் கூறிவந்த நிலையிலும், ரிஷியை பதவிலியிருந்து அகற்ற அக்கட்சியினர் மிகவும் தயக்கம் காட்டிவந்தனர், வருகின்றனர்.



கனடாவில் ஏதிலி அந்தஸ்து கோருவோரின் கவனத்திற்கு...!
[Friday 2024-05-03 18:00]

கனடாவில் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கனடடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கை 1500 வீதமாக உயர்வடைந்துள்ளது.



டான்பாஸில் தாக்குதல் தீவிரம்: அடுத்த கிராமத்தை பிடித்த ரஷ்யா!
[Friday 2024-05-03 06:00]

ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் இன்னொரு கிராமத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கு உக்ரைனில் உள்ள பேர்டிச்சி(Berdychi) கிராமத்தை தனது படைகள் கைப்பற்றியதாக வியாழக்கிழமை அறிவித்தது. டான்பாஸ் பகுதியில் ரஷ்யா சமீபத்தில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளதன் தொடர்ச்சியாக இது இருக்கிறது.



உடை விதிமீறல்: சவுதி பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டு சிறை!
[Friday 2024-05-03 06:00]

சவுதி அரேபியாவின் மனஹெல் அல்-ஓடாய்பி என்ற பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் 29 வயதான உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரும், செயற்பாட்டாளருமான மனஹெல் அல்-ஓடாய்பி(Al-Otaibi), பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது மற்றும் அதிகாரிகளால் "மோசமானது" என்று கருதப்படும் வகையில் உடை அணிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.



வேல்ஸ் கடற்கரையில் கிடந்த 32 வயது பெண்ணின் உடல்!
[Friday 2024-05-03 06:00]

பிரித்தானியாவின் வேல்ஸில் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸின் பெம்புரோக் டாக் (Pembroke Dock) அருகே உள்ள பென்னார் (Pennar) என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செவ்வாய் கிழமை மாலை 32 வயது பெண் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டது.



துபாயில் மீண்டும் கனமழை: சர்வதேச விமான சேவைகள் ரத்து!
[Thursday 2024-05-02 18:00]

துபாயில் மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மேலும், போக்குவரத்து வசதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கனடாவில் உடல் எடை குறைப்பு மருந்துக்கு அனுமதி!
[Thursday 2024-05-02 18:00]

கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடிய உடற்பருமண் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த உடல் எடை குறைப்பு மருந்து வகை கனடாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.



இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்ட பிரபல நாடு!
[Thursday 2024-05-02 18:00]

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.



கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

குடியுரிமை பெற்றும், அதாவது, கனேடிய குடிமக்களானபின்பும், கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமையன்று வெளியான McGill Institute for the Study of Canada என்னும் அமைப்பின் ஆய்வு முடிவுகள், கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கின்றன.



சூடான் உள்நாட்டுப் போர்: மண், இலைகளை உண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்!
[Thursday 2024-05-02 06:00]

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக அங்குள்ள மக்கள் மண், இலைகளை உண்டு உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சூடானில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே வெடித்த உள்நாட்டு போர், நாட்டை மோசமான பசி பட்டினியில் தள்ளியுள்ளது.



பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு!
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 14 வயது பள்ளி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் நேற்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியது.



நாளை லண்டன் மேயர் தேர்தல்: 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவில், லண்டன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை (மார்ச் 02) நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 107 உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தல், பல இடங்களில் பொலிஸ், குற்றப்பிரிவு கமிஷனர் தேர்தல் கூட இதனுடன் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு சற்று முன்னதாக நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலை, பொதுத் தேர்தலின் அரையிறுதிப் போட்டியாகவே கருதப்படுகிறது.



இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
[Wednesday 2024-05-01 16:00]

ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவதை எதிர்த்து, நிகராகுவா என்னும் மத்திய அமெரிக்க நாடு, ஐ.நா சபையின் ஒரு அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஜேர்மனி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவது, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயலாகும் என நிகராகுவா குற்றம் சாட்டியிருந்தது.



லண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2024-05-01 16:00]

பிரித்தானியாவில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லண்டனில் இந்திய வம்சாவளியினரான 25 வயதான சாகில் சர்மா தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.



சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: 19 பேர் பலி!
[Wednesday 2024-05-01 16:00]

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா