Untitled Document
May 11, 2024 [GMT]
உண்மையை மறைக்க முற்படும் தற்போதைய அரசாங்கத்துக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பா?
[Monday 2024-04-22 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காண்பிக்காமல் இருப்பதிலிருந்தும், உண்மைகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இதில் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதைய அரசாங்கத்துக்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காண்பிக்காமல் இருப்பதிலிருந்தும், உண்மைகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இதில் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதைய அரசாங்கத்துக்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

  

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபையும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை முற்றாக மறுப்பதாகக் தெரிவித்த பேராயர், தனது இயலாமைக்கு தானே தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு ஏனையோர் மீது குறை கூறுவது பொறுத்தமற்றது என்றும் சாடினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நினைவேந்தல் நிகழ்விலேயே பேராயர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் திருத்தலம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கொழும்பிலுள்ள ஷங்ரிலா, சினமன் கிரான்ட், கிங்ஸ்பெரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த துரதிஷ்டவசமாக தாக்குதல்களால் 273 அப்பாவி பொது மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்டது. இவர்களில் 82 சிறுவர்களும், 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்தோடு 500க்கும் மேற்பட்டவர்கள் சிறிய அல்லது பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்றும் அங்கவீனமுற்றவர்களாகவுள்ளனர். இந்த தாக்குதல்கள் நாட்டின் அரசியலுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியதோடு, பொருளாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை செலுத்தியது. அன்று வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இன்று வரை கட்டியெழுப்ப முடியாமலிருப்பதிலிருந்து அந்த தாக்குதல்கள் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளன என்பதை எமக்கு உணர்த்துகின்றன.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அப்போதைய அரசாங்கத்தினால் நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான குழுவொன்றும், பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவற்றின் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொறுப்பு உரித்தாக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்னர் நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசங்களில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களிலும், கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதும் தான் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாக கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். எனினும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மறுநாள் தன்னால் குறித்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று தொலைபேசியில் எனக்கு தெரிவித்ததை இங்கு நினைவு கூர்கின்றேன்.

அதன் பின்னர் அந்த அறிக்கையின் முதற் பகுதியை எமக்கு வழங்குவதை தாமதப்படுத்தியதோடு, ஏனைய பகுதிகளை வழங்காமலேயே இருந்தார். குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை மாத்திரம் நடைமுறைப்படுத்தி, தமது அமைச்சரவை அமைச்சர்கள் அறுவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தார். எவ்வாறிருப்பினும் எந்த வகையிலும் வழங்கிய வாக்குறுதிய நிறைவேற்றாத கோட்டாபய ராஜபக்ஷ எம் கண் முன்னே ஆட்சி காலம் நிறைவடைய முன்னரே அதனை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு 2021 ஜூலையில் கத்தோலிக்க ஆயர் பேரவை அனுப்பி கடிதத்துக்கு இன்று வரை பதில் கடிதம் கூட கிடைக்கவில்லை.

அதே போன்று 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆயர் பேரவையால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றதாகக் கூட பதில் கடிதமொன்று வழங்கப்படவில்லை. புதிதாக வெளிப்படுத்தப்படும் தகவல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இந்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதில் செயற்படும் விதமானது எமக்கு இந்த ஆட்சியிலும் நியாயம் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்த்துகிறது. இவை அனைத்தின் ஊடாகவும் பாரதூரமான சந்தேகமொன்று எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள உண்மைகளை மறைப்பதற்கு கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தாக்குதல்களுடன் தொடர்புடைய சில நபர்களையும், நிறுவனங்களையும் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கமும் முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது என்பதைத் தவிர வேறொரு எண்ணப்பாட்டுக்கு எம்மால் வர முடியாது. அவர்களுக்கு இதனுடன் தொடர்பில்லை என்றால் உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது.

தாக்குதல்களின் பின்னணியில் அடிப்படைவாத முஸ்லிம்கள் காணப்படுகின்றமை உண்மை என்ற போதிலும், அவர்களின் பின்னால் வேறு சக்திகளும் இருக்கின்றமைக்கான சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையிலிருந்தும், சாட்சிகளை மறைக்க முற்படுவதிலிருந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இந்த தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான தேவை காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

வெளியாகியுள்ள புதிய தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமல், அவற்றை மறைப்பது கவலைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசியல் மற்றும் பாதுகாப்பு துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவரும் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றமையை கண்டிக்கின்றோம்.

கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் எமது கோரிக்கையை பொருட்படுத்தாமையின் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்கிற்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது. தாக்குதல்களின் இடம்பெற்ற போது சட்டமா அதிபராக பணியாற்றிய தப்புல டி லிவேரா 2021 மே 17ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில், தெரிவித்தவாறு இந்த தாக்குதல்களின் பின்னால் காணப்பட்ட பாரதூரமான சதி என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புகின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள நூலில், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபையும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளமை நியாயமற்ற காரணியாகும். தேர்தலுக்கு முன்னர் அவர் மீது நம்பிக்கை காணப்பட்டது என்பது உண்மையாகும். ஆனால் அதன் பின்னர் அவர் செயற்பட்ட விதம் அந்த நம்பிக்கையை முற்றாக இழக்கச் செய்தது. காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதில் சகல மதத்தவர்களும் பங்கேற்றனர் என்பதையும் அவர் மறந்து விடக் கூடாது.

தற்போதைய அல்லது இனிவரும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாகும். அவ்வாறில்லை எனில் அது இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். உண்மைகளை மறைத்து ஏனையோர் மீது குற்றஞ்சுமத்துவது நாட்டுக்கு நன்மையாக அமையாது. எமக்கான நியாயம் நிலைநாட்டப்படும் வரை எமது கோரிக்கைகளும், போராட்டங்களும் தொடரும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சிறீதரனைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



பொலிசார் உதைத்து விழுந்தியதால் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி! - யாழ்ப்பாணத்தில் சம்பவம்.
[Saturday 2024-05-11 05:00]

யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் நேற்றிரவு பொலிஸார் விரட்டிச் சென்ற ஒருவர், மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி தேர்தலுக்கு சிறந்த வேட்பாளர் கிடைக்கவில்லை!
[Saturday 2024-05-11 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார் ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.



அறிவுள்ளவர்கள் அனுரவுக்கு வாக்களிக்கமாட்டார்களாம்!
[Saturday 2024-05-11 05:00]

அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறது.ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவருக்கும் ஆட்சியமைக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.



4 ஆண்டுகளில் 81 பாடசாலைகள் மூடப்பட்டன!
[Saturday 2024-05-11 05:00]

2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 81 அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மொட்டு நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுடனே உள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்!
[Saturday 2024-05-11 05:00]

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து தமிழ் மக்கள் முன் கொண்டு செல்லும்போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.



அடுத்தடுத்து சிக்கிய ஐஸ் வியாபாரிகள்!
[Saturday 2024-05-11 05:00]

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



பரீட்சை இடைவேளையில் மோதிக்கொண்ட மாணவர்கள்! - வவுனியாவில் பரபரப்பு.
[Saturday 2024-05-11 05:00]

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளின் மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக நேற்று மதியம் இடம்பெற்றது.



தலைவராக செயற்பட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மைத்திரி மேன்முறையீடு!
[Saturday 2024-05-11 05:00]

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.



இலங்கைக்கு வருகிறார் அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் டொனால்ட் லூ!
[Friday 2024-05-10 16:00]

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ இலங்கக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ, இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேற்கொள்கிறார்.



நேற்றிரவு மீண்டும் ரணிலைச் சந்தித்த பசில்!
[Friday 2024-05-10 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.



அதிநவீன பிரசார அலுவலகத்தை திறந்தது பொதுஜன பெரமுன!
[Friday 2024-05-10 16:00]

எதிர்வரும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்ல நெலும் மாவத்தை ஜெயந்திபுரவில் அதிநவீன தேர்தல் அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்துள்ளது.



வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக ஈடு வைத்தவர் கைது!
[Friday 2024-05-10 16:00]

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்ற நபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



பொதுத் தேர்தல் திட்டத்துக்கு ஆப்பு வைக்கவே தேர்தல் ஆணையாளரின் அறிக்கை!
[Friday 2024-05-10 16:00]

பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்த அரசியல் கலந்துரையாடலை முறியடிக்கும் ஒரு நடவடிக்கையாகவே தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் குறித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது என அரசியல் வட்டாரங்கள் கருதுவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.



மன்னாரில் நுங்குத் திருவிழா! Top News
[Friday 2024-05-10 16:00]

வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்குத் திருவிழா இன்று காலை 10.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது.



தாவடியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!
[Friday 2024-05-10 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.



சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு! - சிஐடியில் முறைப்பாடு.
[Friday 2024-05-10 16:00]

நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்தார் முஜிபுர் ரஹ்மான்!
[Friday 2024-05-10 15:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.



தீக்குளித்து உயிர் மாய்த்தார் இளம் பெண்!
[Friday 2024-05-10 15:00]

வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்ற பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளம்பெண் ஒருவர், நேற்றுஇரவு தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார்.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா