அதிகாரத்தில் கோத்தபாய ராஜபக்சே: அகதிகளாக சென்ற தமிழர்கள் அச்சப்படுகிறார்களா? | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

அதிகாரத்தில் கோத்தபாய ராஜபக்சே: அகதிகளாக சென்ற தமிழர்கள் அச்சப்படுகிறார்களா? Top News
[Sunday 2019-12-08 16:00]

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு போர் நிறைவுறும் போது சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலை, ஒரு பெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கியது. பாதுகாப்பான வாழ்விடம் தேடிய ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி படகு வழியே வெளியேறினார்கள். நாடுகடத்தப்படும் நிலையை கருத்தில் கொள்ளாமல் இன்றும் அவ்வாறான முயற்சிகள் நடக்கின்றன. அந்தோணிபிள்ளை தர்ஷன் அவ்வாறு முயற்சித்தவர்களில் ஒருவர். 2012ம் ஆண்டு 21 நாட்கள் கடல் பயணத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை அடைந்தவர், 6 மாத காலம் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். “15 நாட்கள் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருந்தேன், அதன் பிறகு டார்வின் மற்றும் குவின்ஸ்லாந்தில் உள்ள தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டேன்,” என எஸ்பிஎஸ் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டாக பணியாற்றிய நிலையில், இவரின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மேல் முறையீடு செய்த நிலையில், இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு திரும்பும் முடிவினை எடுத்துள்ளார் தர்ஷன்.


  

பணியாற்றுவதற்கான உரிமை மறுக்கப்பட்ட சூழலில், 28 நாட்களில் இலங்கைக்கு திரும்ப இவருக்கு கெடு விதித்துள்ளனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். “உணவை வாங்குவதற்கான அரசின் பண உதவியை நிறுத்தப்பட்டது. பணமின்றி , என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் நாடுதிரும்பும் முடிவை எடுத்தேன்,” எனக் கூறுகிறார் தர்ஷன். 2012ம் ஆண்டு 80 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் ஆஸ்திரேலியா சென்ற படகில் பயணித்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்ரமணியம் மகேந்திரன்,“ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்றடைவதற்குள் சுவாசிக்கவே சிரமப்பட்டவர்களை கண்டுள்ளேன்,” என்கிறார். இலங்கை- ஆஸ்திரேலியா இடையேயான கடல் பயணம் மிக மிக ஆபத்தானதாக கூறப்படும் நிலையில், இவ்வழியே சென்ற நூற்றுக்கணக்கான தமிழ் தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடலிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தனது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு திரும்புவது பாதுகாப்பானது என்றும் கூறியதாக தெரிவிக்கிறார் சுப்ரமணியம். போர் காலக்கட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே, இன்று ஜனாதிபதியாக அதிகாரத்திற்கு திரும்பியிருப்பது தமிழர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகின்றது. “இங்கு (இலங்கையில்) ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று தெரியவில்லை. கடந்த காலத்தில் நடந்தவை குறித்த அச்சம் இன்றும் எங்களிடம் இருக்கிறது.”

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்படுபவர்களை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. “ஆஸ்திரேலியாவை சட்டவிரோதமாக அடைய முயற்சிப்பவர்களை திருப்பி அனுப்புவதில் இலங்கை அரசுடன் ஆஸ்திரேலியா நெருங்கி செயல்பட்டு வருகின்றது. கடந்த மே 2019 முதல் இதுவரை 38 இலங்கையர்கள் அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்,” என்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளர். இவ்வாறு ஆஸ்திரேலியா செல்ல முயலும் தமிழ் இளைஞர்களிடம் ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்த சொந்தமாக கையில் பணம் இல்லை என்கிறார் ஒரு தமிழ் இளைஞர்.

“ஒன்று கடன் வாங்குகிறார்கள், இல்லையெனில் வீட்டை அடமானம் வைக்கிறார்கள். ஆஸ்திரேலியா சென்று நாடுகடத்தப்பட்ட பின்னர், இங்கு அனைத்தையும் இழந்து விடுகிறார்கள்.” 2013ம் ஆண்டு அவ்வாறு கடன் வாங்கி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இளைஞர், ஆஸ்திரேலியா அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். தற்போது, இது தொடர்பான வழக்கை இலங்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகின்றார் அந்த இளைஞர். “அந்த வழக்கு ஆறு ஆண்டுகளாக நடக்கிறது. வழக்கை முடிக்க சுமார் 1.20 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் ரூபாய்) கேட்கின்றனர்.

“கண்காணிப்பு இங்கு தொடர்கிறது. சாதாரண ஆடைகளில் இங்கு காவல்துறையினர் கண்காணிக்கின்றனர். வெளிநாடுகளில் பாதுகாப்பு தேவைப்படும் குறிப்பிடத்தகுந்தோர் இங்குள்ளனர்,” என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆய்வாளராக உள்ள முத்துகிருஷ்ணா சர்வானந்தன். “தற்போதைய ஜனாதிபதி எப்படி சிறுபான்மையினரை கையாள்கிறார்,” என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார். இலங்கையின் தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதற்கு முன், வெளிநாட்டு அரசாங்கங்கள் 6 முதல் 12 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறுகிறார் சர்வானந்தன்.

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா