மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு: -அகரன் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு: -அகரன்
[Friday 2019-10-25 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலத்தில் செய்த வரலாற்று தவறையே இப்போது செய்ய முனைகிறது அதாவது 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்க செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசம் எமது விடயத்தில் தலையிடும் எமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் சர்வதேச ரீதியில்தான் எமது பிரச்சினையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் வாய்கிழிய பேசும் சம்பந்தன் அவர்கள் தான் பேரம் பேசி எமக்கான தீர்வை பெறவேண்டிய சந்தர்பங்கள் எல்லாவற்றையும் கோட்டைவிட்டுவிட்டு அரசை சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பாதுகாத்து வருகிறார்.


  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிதான் எமக்குரிய தீர்வை பெற்றுத் தருவார்கள் அவருக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார் பின்பு ஆட்சிக்கு வந்ததும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இவர்களால் ஒருவிடயத்தை கூட நகர்த்த முடியவில்லை.

இதேபோல் ஜனாதிபதித்தேர்தலில் சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிப்பதற்கும் எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்து தமிழர்கள் சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்.

இவ்வாறக தமிழர்களின் வாக்குகளை பகடைக்காயக வைத்து தங்கள் நலன்களை பெற்றுக்கொண்டு இருக்கின்ற இவர்கள்தான் தங்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிவருபவர்கள்.

கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் எவ்வாறான தந்திரோபாயத்தை கடைப்பிடித்தாரோ அதைத்தான் இந்த தேர்தலிலும் கடைபிடித்துவருகிறார் அதாவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவை அறிவிக்கின்றோம் என்று கூறிவிட்டு இறுதித் தருணத்தில் தங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவளிக்கும் உபாயத்தை கையாண்டு வருகின்றார் சம்பந்தன் அவர்கள்.

போராளிகளினதும் பொதுமக்களினதும் தியாகங்களால் இன்று மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அன்றிலிருந்து இன்று வரை பல தொடர்ச்சியான வரலாற்றுதவறுகளை புரிந்து வருகின்றனர்இஆட்சி மாற்றத்திற்காக பல மில்லியனை வாங்கிக்கொண்டு ஆதரவு அளித்தது மட்டுமன்றி ஐநா மனித உரிமை பேரவையில் ஆறு வருடகாலம் தொடர்சியான காலநீடிப்பை பெற்றுக்கொடுத்து தமிழ் மக்களின் உணர்வுகளை நீர்த்துப்போக செய்திருக்கின்றார்கள்.

பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சமயக் குருமார் புத்திஜீவிகள் ஆகியோரின் முயற்சியால் ஜந்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் 13 முக்கிய அடிப்படை கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமர்ப்பித்து அதற்கு சரியான தீர்வை எந்த ஜனாதிபதி வேட்பாளர் தருகின்றாரோ அவருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்கபட்டது. ஆனால் தமிழரசுக்கட்சி இவற்றுக்கெல்லாம் சம்மதம் தெரிவித்துவிட்டு பின்பு மறைமுகமாக சஜித்பிரேமதாசாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக் கழக மாணவர்களும் புத்திஜீவிகளும் சமயத்தலைவர்களும் எடுத்த முயற்சியையும் அங்கு கையொப்பமிட்ட ஆவணத்தையும் காற்றில் பறக்கவிட்டு அவர்களை முட்டாள்கள் ஆக்கி தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டி அரசியல் அரங்கில் இருந்து இவர்களை ஓரங்கட்டவேண்டும் என்பதுடன் சர்வதேசம் இவ்வாறன தமிழ் தலைமகளுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா