முள்ளிவாய்க்கால் தமிழரின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் ஓர் எழுச்சி மிகு நாள்!! - -சிறிமதன் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

முள்ளிவாய்க்கால் தமிழரின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் ஓர் எழுச்சி மிகு நாள்!! - -சிறிமதன்
[Friday 2019-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு அழியாத வடு என்றே கூறவேண்டும் . இவ்வழிவிற்கு காரணமானவர்கள் ஒரு சிலர் அல்ல நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும், அனைத்து சமய அமைப்புகளும் சர்வதேசமுமே பொறுப்பேற்கவேண்டும். இலங்கையில் தமிழரின் அரசியல் வரலாற்றை எழுதும்போது முள்ளிவாய்க்காலுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்று எழுதப்படல்வேண்டும்.


  

சிங்கள பெளத்த மேலாண்மைவாதம் பெரும்பாலான சிங்கள பௌத்தர்களிடத்தில் மேலோங்கி நிற்பது போல கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சிங்களவர்களிடத்திலும் சிங்கள ஆதிக்கவாதம் வேரூன்றியுள்ளது. இவர்களின் ஆசியுடனும் வீரியத்துடனான உந்துதலின் மூலமே தரையிலும், கடலிலும், விண்ணிலுமிருந்து பாரிய ஆயுதம் பாவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொன்றொழிக்கப்பட்டனர்.

அரசியல் தலைமைகள் அரசியல் அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், பதவி சுகங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மாதாந்தம் அவசரகாலச் சட்டத்திற்கும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் கை உயர்த்தி அனுமதியளித்ததோடு இன அழிப்பிற்கும் ஆதரவளித்தது.

தமிழர் தாயகம், தமிழ் தேசியம், அவைப்பற்றிய அரசியல் உணர்வு, அதற்கான செயற்பாடுகள், விடுதலைச் சிந்தனை எல்லாமே துடைத்தழிக்கப்படல் வேண்டும் எனும் இன மேலாண்மைவாத கருத்தியலோடு ஆயிரக்கணக்கானோரின் உடல், உயிர், உடைமை, தமிழர் நிலவளம் அழிக்கப்பட்டதோடு, உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், விதவைகளாக்கப்பட்டவர்கள், என்று இன்றும் ஆயிரக்கணக்கானோர் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஒரு தொகுதி மக்கள் உளரீதியிலும் ஊனமுற்றவர்களாக்கப்பட்டார்கள், அகதிகளாக்கப்பட்டார்கள், அநாதைகளாக்கப்பட்டார்கள். இராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சூறையாடப்பட்டது. காணாமலாக்கப்பட்டோர், அரசியல்கைதிகள் என ஒட்டுமொத்த தமிழ் சமூகமே அழிவினை சந்தித்தது மட்டுமல்ல இதே வேதனை துன்பியலுக்குள் தொடர்ச்சியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றமையும் அரசியலில் இருந்து மக்களை தூரமாக்கும் அரசியல் செயல்பாடு என்பதோடு தொடரும் இன அழிப்ப என்றுகூட கூறலாம்.

பாதிக்கப்பட்ட மக்களை தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அலையவிடுவதும், தொடர் வறுமையில் வைத்திருப்பதும், இனவிடுதலை என அலையலையாக திரண்டெழுந்த மக்களை தோல்வியின் மனநிலைக்குள் தள்ளி எழவிடாமல் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதும், சொந்த வாழ்க்கையை நொந்து மக்களை விரக்தி நிலையில் நீண்டகாலத்திற்கு வைத்திருப்பதும் இன அழிப்பின் தொடர்ச்சி எனலாம்.

இந்நிலையில், தமிழர் தாயக விடுதலை எனப் போராடிய தமிழ் சமூகம் இன்று இராணுவம் கையகப்படுத்திய நிலமீட்புப் போராட்டத்தில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நீதிக்கான போராட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைச் செயற்பாடுகளில் பெரும்பான்மையானோர் பார்வையாளர்களாக உள்ளனர். இன்னும் பலர் காட்சிக்காக முகம் காட்டுகின்றனர். இவற்றிற்கு மத்தியில் தமிழர் அரசியலில் இருந்து தூர விலகிய அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழிநடத்தவும் ஆரம்பித்துவிட்டனர்.

ஆட்சியாளர்கள் இன அழிப்பின் அர்சியல் நோக்கம் நிறைவேறுவதை நேரடியாகவே காணத் தொங்கி விட்டனர். தமிழர் தாயகம் காக்க இராணுவத்தோடு போராடியதோடு, இராணுவமே எம் தாயகத்திலிருந்து வெளியேறு என்று குரல் எழுப்பியவர்களில் ஒரு பிரிவினர் இன்று இராணுவத்தில் சேர்வதும், அவர்களது பண்ணைகளில் வேலை செய்வதும், இராணுவம் நடாத்தும் முன் பள்ளிகளில் ஆசிரிய தொழில் பார்ப்பதும், இராணுவத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதும் தொடரும் இன அழிப்பின் உதாரணங்களாகும்.

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் என்பது வருடமொரு முறை வந்துபோகும் தீபாவளி, தைப் பொங்கல் போன்ற திருநாள்கள் அல்ல. கொத்து கொத்தாக கொல்லப்பட்டவர்களை நினைந்து சமூகமாக கூடி அழும் தினமுமல்ல. இந்நாள் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மையப்படுத்திய அரசியல் தியாக நாள். விழிப்புணர்வு சமூக எழுச்சி நாள், தியாகச் சுடர் எழும் திருநாள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கட்சிகளுக்கு சொந்தமான நாளல்ல. இது தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள், புலி ஆதரவினர் எனும் பெயர் குத்தப்பட்டும் தமிழர் அரசியலை தலைமேல் சுமந்து வலிகளோடு அரசியல் செயற்பாட்டில் தம்மை அர்ப்பணித்து நிற்கும் அரசியலாளர்களுக்கு, அதன் வழிநிற்போருக்குச் சொந்தமானது. அழிவின், இழப்புக்களின் வலி சுமந்து வாழ்விற்காகப் போராடும் மக்களுக்குச் சொந்தமானது.

யுத்த முன்னெடுப்புகள் தொடர்கையில், இன அழிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கையில் அதனை நிகழ்த்திய ஆட்சியாளர்களுக்கு, ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தமது சுகபோக அரசியலுக்காக விடுதலையைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கு, தமிழர் அரசியலை விட்டு விலகி ஆட்சியாளர்களின் காலடியில் சுகம் அனுபவித்தவர்களுக்கு இன்று கரிநாள். அத்தோடு, தற்போதும் யுத்தக் குற்றங்கள் நடக்கவில்லை, மனித உரிமைகள் மீறப்படவில்லை, எந்தவொரு இராணுவ சிப்பாயையும் யுத்தக் குற்றங்களுக்காக நிறுத்தப்போவதில்லை, காணாமலாக்கப்பட்டோர் என்று எவரும் இல்லை, அரசியல்கைதிகள் எவரும் இல்லை எனக் கூறும் ஆட்சியாளர்களுக்கு துணைநின்று இணக்க அரசியல் நடத்துபவர்களுக்கு இன்று கரிநாள்.

இந்தியாவின், மேற்குலகின் அரசியலுக்காக தமிழரின் அரசியலை காட்டிக்கொடுப்பவர்கள், வடக்கிற்கு ஒரு முகமும், தெற்கிற்கு இன்னுமொரு முகமும் காட்டி அசிங்க அரசியல் நடத்துபவர்களுக்கு இன்று கரிநாள். சுயநல அரசியலுக்காக, பதவிக்காக தமிழ் மக்களின் அரசியலை சிதைக்கும், பிழையாக வழிநடத்தும் அரசியல் கோமாளிகளுக்கு, குருட்டு வழிகாட்டிகளுக்கு இன்று கரிநாள்.

முள்ளிவாய்க்கால் அழிவைத் தொடர்ந்து தமிழரின் அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் குழப்ப நிலையே தொடர்கிறது. தலைமைகள் எனக் கூறிக்கொள்வோர், தலைமைகளாக கவர்ச்சிக் காட்டுவோர், அரசியல் கதிரைகளுக்கு மட்டும் தமிழர் அரசியல் பேசுவோருக்கு மத்தியில் நினைவேந்தலை யார் நடத்த வேண்டும் எனும் தெளிவின்மையில் யார் நடாத்தும் நினைவேந்தலில் பங்கு பற்றுவது என்ற குழப்பகரமான சூழ்நிலைக்கு மக்கள் முகம்கொடுத்தனர்.

எதிர்வரும் 10வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் தமிழரின் அரசியலை மையப்படுத்திய அரசியல் பிரகடனம் செய்து சத்தியபிரமானம் செய்வது முக்கியமாகும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஈகைச் சுடர் ஏற்றல் என்பது அழிந்தாலும் அழியமாட்டோம், வீழ்த்தினாலும் விழமாட்டோம், மாற்று வடிவத்தில் மாற்று சக்தியாக எழுச்சியுறுவோம் என்பதன் அடையாளமாகும்.

எமது விடுதலைக்கு இன்னும் நீண்டகாலம் இருப்பதாகவே இன்றைய அரசியல் சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன. அடுத்த கட்டம் இன்னும் இறுக்கமாகவே அமையப்போகிறது. கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் சக்தியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. எந்தவொரு தனி அமைப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் சுடர் ஏற்றுதல் நிகழ்வை கையகப்படுத்தி உரிமைகோரும் நிலை வரக்கூடாது.

ஏனெனில், தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் என்பது பிழையான தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிரானதும், பெரும்பான்மை இனவாத ஆட்சியாளர்களுக்கு எதிரானதும், துரோக அரசியலுக்காக தமிழ் மக்களின் அரசியலை விலைபேசும், காட்டிக்கொடுக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டமாகும். இப்போராட்டத்தின் பங்காளிகளாக அரசியலாளர்கள், அரசியல் கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், அடிமட்ட செயற்பாட்டாளர்கள் என்பவர்களோடு அடிமட்ட மக்களின் பங்களிப்பும் அத்தியாவசியமும் அவசியமுமானதாகும்.

இதனை கட்டியெழுப்பும் சக்தி, வழி நடத்தும் தன்மை, கட்டுக்கோப்பாக ஓரணியில் செயற்படுத்தும் திறன் கொண்ட அமைப்பை உருவாக்குவதே உடனடி செயற்பாடாக அமைதல் வேண்டும். அதன் மூலமே பொது எதிரியை சந்திக்க முடியும். முள்ளிவாய்க்கால் நிகழ்வு ஒருநாள் நிகழ்வல்ல. இது தமிழ் மக்களின் அரசியல் எழுச்சிப் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் சமூகத்தின் தியாகத்தின் நினைவு நாள் அல்ல. தியாகத்திற்கு அழைக்கும் தீப நாள்.

“நாமே விடியல், நமதே விடியல்” என தமிழரின் அரசியல் பாதையில் விழிப்போடு பயணித்திட சுடராகி சுடர் எழுப்பி தலைநிமிர திடசங்கட்பம் கொண்டெழுவோம்.

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா