04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்? சார்மினி சேரசிங்கி | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 27, 2024 [GMT]

04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்? சார்மினி சேரசிங்கி
[Tuesday 2019-01-29 20:00]

சிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு எழுதும் பகிரங்க மடல்

அன்புள்ள அமைச்சர் மங்கள சமரவீர அவர்கட்கு,

உங்களை மாண்புமிகு அமைச்சர் என விளிக்கப் படாததையிட்டு கவலைப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன். காரணம் உங்களைத் தெரிந்த என் போன்றவர்களுக்கு நீங்கள் ஏற்கனவே மாண்புமிகு என்பதால் அது பற்றி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.


  

குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக உங்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கு நான் முடிவு எடுத்ததற்குக் காரணம் பிரதமர் போலல்லாது - அவர் எப்போதும் தலையை நிரந்தரமாக ஆகாயத்தில் வைத்துக் கொண்டிருப்பவர் - எங்களது "முதன்மை வேலையாள்" என வெட்கமில்லாமல் தொடர்ந்து மாறுவேடம் அணிந்து திரிபவர் போலல்லாது எனது நண்பராகிய நீங்கள் உங்கள் தலையைச் சரியாக திருக்கி வைத்திருப்பவர். அதற்கும் மேலாக, உங்களுக்கு மனட்சாட்சி என்ற ஒன்று இருக்கிறது. எனவே எனக்கு உங்களிடம் அபரிமிதமான நம்பிக்கை இருக்கிறது. எங்களது நாட்டு மக்களுக்கு எது சரியோ அதைச் செய்யுங்கள்.

இப்போது தொடருகின்றேன்!

அடுத்த கிழமை, தங்கள் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிரித்தானியர் எங்களது நாட்டைவிட்டுத் தப்பியோடி 71 ஆண்டுகள் கழிந்துவிட்டதை சிறிலங்கா கொண்டாட இருக்கிறது. இந்த 71 ஆண்டுகளாக நாட்டு மக்களாகிய எங்களை இரண்டு ஆதிக்க அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றிவிட்டன, எம்மைப் பயன்படுத்திவிட்டன, எம்மைப் பேய்க்காட்டிவிட்டன. எம்மை மோசம் செய்துவிட்டன. இன்று நாட்டைக் கடனாளியாக்கி இருண்ட துளைக்குள் தள்ளி விட்டுவிட்டன. நிதி அமைச்சர் என்ற முறையில் அந்தத் துளை எவ்வளவு ஆழமானது, இருளானது என்பது உங்களுக்கு மிக நுட்பமாகத் தெரியும்.

மங்களா, நீங்கள் ஒரு விவேகமான, புத்திசாலி மனிதர் என்றமுறையில் சிறிலங்கா மக்களாகிய எங்களுக்கு பெப்ரவரி 04 உள்ளபடி ஒரு துக்கநாள் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்! பிரித்தானியர் எங்களது நாட்டைவிட்டுத் தப்பியோடு 71 ஆண்டுகள் கழிந்துவிட்டது. அதனை நாம் "சுதந்திரநாள்" என அழைக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் எங்கே நிற்கிறோம்? சிறிலங்காவின் மக்களாகிய நாங்கள் உண்மையில் எதனையும் சாதிக்க முடியவில்லை. உண்மையில் நாங்கள் ஆதாயம் அடைந்ததைவிட பல மடங்கு இழந்து விட்டோம்.

கடந்த 71 ஆண்டுகளாக, நாங்கள், எங்களது பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் வாக்களித்த அரசியல்வாதிகள் மட்டுமே பயன் அடைந்துள்ளார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? எங்களது மக்களை மொழி, இன, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் துருவப்படுத்தி விட்டார்கள். அதன் மூலம், எங்களது வாழ்வில் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இறுதியில் எமது மக்கள் இடையிலேயே ஒரு போருக்கு இட்டுச் சென்றது.

சரி, இப்போது அது வரலாறாகிவிட்டது. மேலும், நாங்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய அரசியல்வாதிகள்- எங்களது வேலையாட்கள் - என்ன செய்தார்கள்? எங்களது செலவில் தங்களையும் தங்களது குடும்பங்களையும் தங்களுக்குத் துதிபாடுபவர்களையும் கவனித்துக் கொண்டார்கள். இந்த நாட்டில் - தேரவாத பவுத்தத்தின் தொட்டிலான நாட்டில் - புத்த சாசனத்தை பயன்படுத்தினார்கள் - தவறாகப் பயன்படுத்தினார்கள் - இளித்தவாய் சிங்களவர்களை இனவாத முட்டாக்கள் ஆக்கினார்கள் - மற்றவர்கள் பார்வையில் கோமாளிகளாக இருத்திவிட்டார்கள் - எங்களது பழமையான புனிதமான விழுமியங்களை அழித்தார்கள். பவுத்த சமயக் குருமாரை அழுக்காக்கி விட்டார்கள், பிரிவினையை உருவாக்கினார்கள், இன மற்றும் மத வேற்றுமையை உருவாக்கினார்கள், எங்களது இளையோரை - நாட்டின் நாளைய சந்ததியினரை - மூளைச் சலவை செய்து இனவாதம் பேசும் சிங்கள - பவுத்த கோட்பாட்டர்களாக உருமாற்றினார்கள். அவர்களை பண்பாட்டில் கவ்வைக்குதவானவர்களாகவும் நடத்தையில் இழிந்தவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.

இதையா நாம் பெப்ரவரி 4 இல் கொண்டாடப் போகிறோம்?

இந்த நாளில் - பெப்ரவரி 04 - 'சுதந்திர நாள் கொண்டாட்டங்கள்' என ஆண்டுதோறும் நடக்கிற கண்காட்சியைக் காணப் போகிறோம். முடிவில் இதற்கான செலவை சிறிலங்கா மக்களாகிய நாங்கள்தான் செலுத்தப் போகிறோம். நாங்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திய எங்களது "வேலையாட்களின்" அகங்காரத்தை உயர்த்த எங்களது பணத்தை அறிவற்ற முறையில் செலவு செய்யப் போகிறோமா? இல்லை, நாங்கள் செய்யப் போவதில்லை!

இந்தக் கண்காட்சியில் நட்சத்திர வித்தைக்காரர் எங்களது "தலைமை வேலையாள்" துரோகி மயித்திரிபால சிறிசேனாதான். அரசியல் யாப்பை மீண்டும் மீண்டும் வெளிப்படையான தண்டனைக்குப் பயமின்றி அத்துமீறிய அவரை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் போட்டு சிக்காராக மூடியிருக்க வேண்டும். மொத்தம் 6.25 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்து தெரிவு செய்த அரசியல் அற்ப மனிதரொருவர் ஒக்தோபர் 26, 2018 அன்று எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார். அப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகி ஒருவரது, அரசியல் அற்பரான ஒருவரது தன்முனைப்பை ஊக்குவிப்பதற்கு எங்களது பணத்தைச் செலவழிக்கப் போகிறோமோ? இல்லை. நிச்சயமாக இல்லை.

நிதி அமைச்சர் என்ற முறையில் சிறிசேனாவின் தேசத் துரோகம் பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்தத் துரோகம் இராசபக்சாவின் குடும்ப ஆட்சியை கொல்லைப்புற வழியாக மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது. இதனால் கடனில் மூழ்கியிருக்கும் நாட்டுக்கு - எங்களுக்கு - நாட்டுமக்களுக்கு சட்டத்துக்கு விரோதமான இராசபக்சாவின் அந்தத் முறைதவறாள 51 நாள் ஆட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான உரூபாய் இழப்பை உண்டாக்கியது. மேலும், நிதி அமைச்சர் என்ற முறையில் சிறிசேனாவின் இரண்டகம் காரணமாக ஏற்பட்ட நிதியிழப்பை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த இழப்பை முடிவில் நாங்கள்தான் - சிறிலங்காவின் மக்கள்தான் - சுமக்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பலவிதமான போர்வையில் விலைவாசி கட்டுக்கடங்காது வானில் பறக்கப் போகிறது. https://www.colombotelegraph.com/index.php/4th-february-2019-celebrating-71-years-of-what/

குறிப்பு - கட்டுரையாளர் சார்மினி சேரசிங்கி ஒரு முற்போக்கு ஊடகவியலாளர். Colombo Telegraph என்ற இணைய தளத்தில் அவரது ஆக்கங்கள் பிரசுரமாகின்றன. சிங்களவர்கள் மத்தியிலும் உண்மையை, உண்மையாக எழுதும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்தவர் நக்கீரன்.

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா